Wednesday, March 18, 2026
Home Blog Page 201

கவனிக்காத பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்தை ரத்து செய்யலாம்! பெற்றோருக்கு உரிமை உள்ளதாக ஐகோர்ட் தீர்ப்பு!

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால், வயதான காலத்தில் தங்களைக் கவனிக்காமலும், மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.

பரந்தூரில் விமான நிலையம்! பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு!

இதுதொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்” கீழ், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அத்திட்டத்தினால் ஏற்படும் சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment), சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment), ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் கருத்தறிந்து, அவர்களின் அனுமதி பெற்ற பின்பே நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.

ஆம் ஆத்மி அமைச்சர் முன்னிலையில் மதமாற்றம்! இந்து கடவுள்களை விமர்சித்ததால் சர்ச்சை!

டெல்லியில் சுமார் 10 ஆயிரம் பேர் புத்த மதத்தை தழுவும் நிகழ்வில் டெல்லி ஆம் ஆத்மி அரசின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கலந்துகொண்டார். அங்கு “இந்து கடவுள்களையும் தெய்வங்களையும் வணங்குவதில்லை” என்று அவர்கள் உறுதிமொழி எடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நிதிச் சிக்கலில் ‘நியூஸ்7 தமிழ்’ தொலைக்காட்சி! ஊதியப் பிரச்சனை குறித்து நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்தின் முன்னணி காட்சி ஊடகமான ‘நியூஸ்7 தமிழ்’ தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தாது மணல் தொழிலில் அதானி கால்பதிக்க சலுகை! கனிம அகழ்வுக்கான தடையை நீக்குகிறது மோடி அரசு?

கடற்கரை தாதுமணல் தொழிலிலும் கெளதம் அதானியின் அதானி குழுமம் கால்பதிக்க உள்ளது. இதற்காக அக்குழுமம் சார்பில் இரண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தாதுமணல் எடுக்க 2019ம் ஆண்டில் தனியாருக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்பப் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்துள்ளதற்கு மருத்துவர்களை இடமாற்றம் செய்வதா? அமைச்சர் மா.சு.க்கு அன்புமணி கண்டனம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புக்கடி மருந்து இல்லை, எக்ஸ்-ரே கருவி பழுது, கட்டிடம் பாழடைந்துள்ளது என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த இரு மருத்துவர்களை மருத்துவ அமைச்சர் பணியிட மாற்றம் செய்திருப்பது ஏற்க முடியாதது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

antalya bayan escort