ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 371 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நரா நகரில் இன்று காலை 11.30 மணி அளவில் யமாட்டோ சைடாய்ஜி ரயில் நிலையத்தின் எதிரே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஷின்ஸோ அபே உரையாற்றினார். அப்போது அவரை நோக்கி ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் சுட்ட முதல் குண்டு குறி தவறியதாகவும், இரண்டாவது குண்டு ஷின்ஸோ அபே மீது பாய்ந்ததாகவும் தெரிகிறது.
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 10ம் வகுப்பு மாணவர்கள்! 4 பேர் கைது!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்த கொடிக்களத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் மே 22-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அந்நிகழ்ச்சியில் திட்டக்குடியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் கலந்து கொண்டனர். கேக் வெட்டிய போது மாணவ, மாணவியர் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.
காமராஜ் வீடு உள்பட 49 இடங்களில் ரெய்டு! அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எடப்பாடி கண்டனம்!
முன்னாள் அமைச்சர் வேலுமணி, மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு நெருக்கமானவர்களாக கருதப்படும் வடவள்ளி சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை, மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகன் செந்தில்குமார் ஆகியோரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக சோதனைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது டெல்டா மாவட்டத்தில் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜை லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைத்திருக்கிறது.
ஊழியர்களை மொத்தமாக வேலை நீக்கம் செய்ய மக்கள் டிவி முயற்சி! சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் எதிர்ப்பு!
மக்கள் தொலைக்காட்சி செப்டம்பர் – 6, 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் இந்த தொலைக்காட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவில் இயங்குகிறது. சமுதாயத்துக்குத் தீங்கானவை எனக் கருதும் விளம்பரங்களை ஒளிபரப்புவதில்லை என்ற கொள்கையை தொலைக்காட்சி நிர்வாகம் பின்பற்றி வருகிறது.
டெங்கு, சிக்குன் குன்யா பயம் வேண்டாம்! புதுவை பூச்சி கட்டுப்பாட்டுத்துறை அசத்தல் கண்டுபிடிப்பு!
மழைக்காலம் தொடங்கி விட்டால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மழைக்காலத்தில் உருவாகும் கொசுக்களால் பலவித நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், இந்த கொசுக்களை ஒழிக்கவும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஆண்டு திட்டத்தின்படி, இந்த ஆண்டு 10,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை தலைமையாக தேர்வாகிறார் EPS! உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், ‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
