சேலம் எட்டு வழிச்சாலைக்காக 90% நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டப்பணிகள் தொடங்கும் எனவும், அதே சயம் மக்கள் முழுமையாக எதிர்த்தால் திட்டம் கைவிடப்படும் என்று மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி. கே. சிங் தெரிவித்துள்ளார்.
அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்ச! வெளிநாடு தப்ப பசில் ராஜபக்ச முயற்சி!
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் குதித்த பொதுமக்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை தீவைத்து எரித்தனர்.
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்! மேலும் மூவரையும் நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம்!
கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் பல முதல்வர்கள் உள்ளனர்! திமுகவின் கைக்கூலி ஓபிஎஸ்! ஈபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு!
திமுகவின் கைக்கூலியாக பன்னீர்செல்வம் செயல்படுகிறார். எங்களின் கட்சியில் பிளவு ஏற்படுத்த நினைத்த மு.க.ஸ்டாலினுக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலினுடன் இணைந்து பன்னீர்செல்வம் அதிமுகவை அழிக்க நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்” என்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மீன்பாடி வண்டியில் கற்களை எடுத்து வந்து தாக்கினார்கள்! மனசாட்சி இல்லாதவர் ஓபிஎஸ்!
“அதிமுகவில் உயர்ந்த பதவிகளை வழங்கிய தொண்டர்களைத் தாக்கி, அவர்களுக்கு நல்ல வெகுமதியை ஓபிஎஸ் வழங்கியுள்ளார்” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகம் வில்லங்க சொத்து! சீல் வைத்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு!
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் வானகரத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்காமல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.
