Friday, February 27, 2026
Home Blog Page 240

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்! தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு! கட்சிகள் தூண்டுதலால் இளைஞர்கள் வன்முறை! ரயில்கள் தீக்கிரை!

மத்திய அரசு புதிதாக 4 ஆண்டுகள் ராணுவப் பணி என்ற திட்டத்தை, அக்னிபத் என்ற பெயரில் அறிவித்திருக்கிறது. இந்த 4 ஆண்டு ராணுவ பணியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்த விதச் சலுகையும் இருக்காது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பது போல் சேர்த்து, அவர்களில் சிறப்பாக பணியாற்றும் 25 சதவீதம் பேரை மட்டும் 4 ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நிரந்தமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவப்படையிலும் இவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

ராஜ கண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க கெடு! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி!

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக(BDO) ராஜேந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் 26-ம் தேதி, அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், தனது உதவியாளர் மூலம் பிடிஓ ராஜேந்திரன் மற்றும் அவருடன் பணிபுரியும் மற்றொரு அரசு அலுவலரைச் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

கோவிலில் முதல் மரியாதை கடவுளுக்கா? மனிதனுக்கா? உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டியைச் சேர்ந்த சேதுபதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘சிங்கம்புணரி அடுத்த வடவன்பட்டி சண்டிவீரன் கோவிலில் தனி நபருக்கு சாதி அடிப்படையில் முதல் மரியாதை தரப்படுகிறது. தனி நபருக்கு கோவிலில் முதல் மரியாதை தரப்படுவது சட்டத்திற்கு புறம்பானது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து வட்டாட்சியர் முன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! உண்டா?, இல்லையா? பிடிஆர் முக்கிய தகவல்!

மதுரையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

தலைமை பொறுப்பை பிடிப்பதில் தீவிரம்! ஓபிஎஸ்., ஈபிஎஸ்., தனித்தனியாக ஆலோசனை!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதிய சிக்கலில் நயன்தாரா-விக்கி! மனித உரிமைகள் ஆணையத்தில் திடீர் வழக்கு!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தின்போது, கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிக்காதது குறித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

antalya bayan escort