அனிதாவை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்தது போல் பாஜக செய்யவில்லை, அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா என மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை! இளநீர் விற்கும் திருப்பூர் தாயம்மாவுக்கு பாராட்டு!
மன் கி பாத் நிகழ்ச்சியின்போது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் செயல் மிகவும் ஊக்கம் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்! தனித்து போட்டியிடும் பாமக! அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது.
அத்துடன் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
குற்றப் பின்னணி இருந்தால் சீட் இல்லை! ‘திராவிட மாடல்’ திமுக அரசு! கட்சியினருக்கு ஸ்டாலின் கடிதம்!
வேட்பாளர்கள் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உளவு மென்பொருள் விவகாரம்! மோடி அரசு தேசத்துரோகம்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
பெகாசஸ் விவகாரத்தில் மோடி அரசு தேசத் துரோகம் செய்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தி இந்தியாவில் அரசியல் சூட்டை அதிகரித்துள்ளது.
பெரியண்ணன் மனப்பான்மை எடுபடாது! நாகாலாந்து அல்ல, தமிழ்நாடு! ஆளுநரை மிரட்டும் தி.மு.க.!
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நிலைப்பாட்டை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. `மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல்துறைக்கு கைகொடுக்கும்; ஆனால் அரசியலில் எடுபடாது என்பதை ஆளுநர் உணரவேண்டும்’ என திமுக சாடியுள்ளது.
