பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆர்யா நடித்துள்ள ’டெடி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள ‘டெடி’, திருமணத்துக்குப் பிறகு ஆர்யா நடித்துள்ள முதல் படமாகும்.
திமுக சார்பில் முதலியார்பேட்டையில் களம் இறங்குகிறார் சம்பத்! அமைப்பாளர் சிவா முன்னிலையில் விருப்ப மனு அளித்தார்!
பிரபல வழக்கறிஞரும், கலாம் சேவை மைய நிறுவனருமான சம்பத், வரும் சட்டமன்ற தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உள்ளார். இதையொட்டி, மாநில திமுக அமைப்பாளர் சிவா முன்னிலையில், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அவர் விருப்ப மனு அளித்தார்.
நிரூபிக்கப்படாத பதஞ்சலி நிறுவன மருந்துக்கு ஆதரவு! மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு IMA கண்டனம்!
அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படாத ஒரு மருந்தை கோவிட்19-க்கு எதிரான துணைச் சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என சுகாதார அமைச்சர் எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்? என ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
உங்கள் பிச்சையில்தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா? ஆர்.எஸ்.பாரதி வழக்கில் நீதிமன்றம் காட்டம்!
உங்கள் பிச்சையில்தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா?, சட்டம் இயற்றும் இடத்தில் இருப்பவர், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசுவது ஏற்புடையதா? என ஆர்.எஸ். பாரதி வழக்கில் நீதிபதி வேதனை தெரிவித்தார்.
தனித்து விடப்படும் ரங்கசாமி! தேர்தல் களத்தில் தடுமாறுவதாக தொண்டர்கள் வேதனை! ‘வேல்ஸ் பார்வை’!
நம்பிக்கையான தளபதி இல்லாததால், அடுத்த கட்ட நகர்வை ஆலோசிக்கவும், தீர்மானிக்கவும் முடியாமல் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி திணறுவதாக தெரிகிறது. இதன் காரணமாக முடிவெடுப்பதில் அவர் தாமதம் செய்தால், என்.ஆர். காங்கிரஸ் தனித்துவிடப்படலாம் என்ற சூழலும் தென்படுகிறது.
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி! கே.எஸ்.அழகிரி, அவரது குடும்பத்தினர் மீது வழக்கு!
அங்கீகாரம் இல்லாமல் கல்லூரி நடத்தி மோசடி செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்னாட்டு ஜான்சிராணி அஞ்சலை அம்மாள் நினைவேந்தல் கூட்டம்! ராஜா வாசுதேவனின் புத்தகம் வெளியீடு!
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் 60-வது ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ‘அஞ்சலை அம்மாள்’ புத்தகம் எழுதிய, ஊடக ஜாம்பவானும், எழுத்தாளருமான ராஜா வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
