கல்லூர் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பாஜக தலைவராகிறாரா நமச்சிவாயம்? சாமிநாதனுக்கு தேசிய அளவில் பதவியா?
முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை மாநிலத் தலைவராக நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தற்போதைய மாநிலத் தலைவர் சாமிநாதனுக்கு, தேசிய அளவிலான ஏதாவதொரு பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு பெருமை சேர்த்த தியாகி ‘கடலூர் அஞ்சலை அம்மாள்’! வீர மங்கையின் வரலாற்றை வெளிக்கொணரும் ராஜா வாசுதேவனின் புத்தகம்!
சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் இருந்தாலும், அவர்களில் பலரை நமக்கு தெரியவே இல்லை. அவ்வாறு மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட தியாகிகளை, வீரர்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை தொடங்கியிருக்கிறார் பிரபல ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ராஜா வாசுதேவன்.
மீண்டும் அதிமுக ஆட்சி! ஜெ. நினைவிடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூளுரை!
சென்னை, மெரினா கடற்கரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட, ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உறுதி ஏற்க வேண்டும் என்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அறிவுறுத்தினார்.
டெல்லியில் நடந்தது வன்முறையா? கிளர்ச்சியா? | தமிழகத்தில் வன்முறையைத் தூண்ட திருமாவளவன், குணசேகரன் முயற்சியா?
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், அதிர வைக்கிறது. மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில், நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள தீயசக்திகளுக்கு பலர் வக்காலத்து வாங்குவது பெருங்கொடுமை.
