ஒரு மனிதனின் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. இரவில் ஆழ்ந்து உறங்குவது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். அதேநேரம், வெளிச்சத்தில் தூங்குவது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட வேண்டுமா? மைத்ரேய முகூர்த்த நேரத்துல ஒரு சின்ன தொகையை கொடுங்க!
கடன் சீக்கிரம் அடைய சித்தர்களால் நமக்கு அருளப்பட்ட நேரம்தான் மைத்ரேய முகூர்த்த நேரம். வாங்கிய கடன் தொகையிலிருந்து ஒரு சிறு தொகையை இந்த மைத்ர முகூர்த்தம் அல்லது மைத்ரேய முகூர்த்த நேரத்தில் செலுத்தினால் நம்முடைய கடன் சுமையானது படிப்படியாக சீக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை. எளிதில் தீர்க்க இயலாத மிகப்பெரும் கடன் சுமையை குறைக்க மைத்ர முகூர்த்தம் கைகொடுக்கும் என்று ‘காலபிரகாசிகை’ என்னும் ஜோதிட மூல நூலில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் 18% செல்வத்தை கட்டுப்படுத்தும் 2000 குடும்பங்கள்! 1.8% மட்டுமே வரி செலுத்தும் அதிர்ச்சித் தகவல் அம்பலம்!
பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தனு தேஷ்பாண்டே, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை நிலவுவதை அம்பலப்படுத்தி உள்ளார்.
நுரையீரலை இயற்கையாகவே சுத்தம் செய்யும் உணவுகள் எவை? சுவாசப் பிரச்சனை, புற்றுநோய்க்கு விடைகொடுக்க தயாரா?
நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்று நுரையிரல். மாசு நிறைந்த காற்று, வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், சீரான உடற்பயிற்சி செய்வது, புகைப்பழக்கத்தை கைவிடுவது மட்டுமின்றி உணவு முறையில் குறிப்பிட்ட சில உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் உங்கள் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகளை தெரிந்துகொள்வோம்.
‘யார் அந்த sir?’ திடுக் தகவல்கள் அம்பலம்! உயர் கல்வித்துறை அமைச்சரே, ராஜினாமா செய்க!
நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி பாலியல் பாலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சரும், பெருநகர காவல் ஆணையரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை ஊடகங்களிடம் தெரிவித்தார்கள். பெருநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
