இந்தியாவிலேயே முதன்முறையாக, கேரளாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (Artificial Intelligence) செயல்படக்கூடிய பள்ளிக்கூடம் அறிமுகம் ஆகியுள்ளது. இயந்திரங்கள் மனித அறிவுடன் இயங்குவதையே செயற்கை நுண்ணறிவு அல்லது ஏஐ(AI) என்கிறோம்.
ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என ஐகோர்ட் அதிரடித் தீர்ப்பு! அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்கவும் மறுப்பு!
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, பொதுக்குழுக் கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவின் அடிப்படையில், அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
கதிரியக்க நீரைக் கடலில் கலக்கவிடும் ஜப்பான்! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கை என கண்டனம்!
ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் நேற்றிலிருந்து வெளியேற்றுகிறது. ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு சீனா, வடகொரியா, தென்கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘கடைசி விவசாயி’ திரைப்படத்துக்கு 2 தேசிய விருதுகள்! ராக்கெட்ரி சிறந்த திரைப்படம்! அல்லு அர்ஜுன் சிறந்த நடிகர்!
இந்திய அரசு சார்பில் திரையுலகினரை கெளரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 1954 முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எவை என நடுவர்களால் தேர்வுசெய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறியது ரோவர்! 2 வாரங்களுக்குத் தென்துருவத்தில் ஆய்வு! சந்திரயான்-3 மிஷன் பூரண வெற்றி!
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன், நிலவில் நேற்று (ஆக.23) வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வருகிறது. ஊர்திக்கலமான ரோவர், அதன் தாய்க்கலமான லேண்டரில் இருந்து வெளியே வந்துவிட்டதை உறுதி செய்யும் வகையில், தாயும் சேயும் ஒன்றையொன்று படமெடுத்து அனுப்பிவிட்டன.