ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை முறித்தது அதிமுக! 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி என அறிவிப்பு!
பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் போராட்டம்! பி.ஆர். பாண்டியனிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட போலீஸார்?
காவிரியில் தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனை காவல்துறையினர் முரட்டுத்தனமாக கைது செய்தனர்.
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்! சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்! அரசுக்கு பெரும் நெருக்கடி!
மின்கட்டண உயர்வை திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாததால், தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
கல்வித்துறையை நாசமாக்குவதுதான் அஜெண்டாவா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் இளக்காரமா? அவமானப்படுத்திய கடலூர் மேயர்!
4.00 Minute(s) Read : பள்ளிகளைக் கோயில்கள் என்றும், ஆசிரியர்களை தெய்வங்கள் என்றும் கைகூப்பித் தொழுதக் காலம் ஒன்றிருந்தது. இப்போதோ ஆசிரியர்களைப் பெற்றோர்கள் செருப்பால் அடிப்பதும், பொதுமக்கள் அவதூறு பேசுவதும் வெகு சாதாரணமாக நடக்கிறது.
பணி கோரி போராட்டம் நடத்திய கேங்மேன்களுக்கு சம்மன் வழங்குவதா? இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என ஈபிஎஸ் எச்சரிக்கை!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக அரசில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப் பணி செய்வதற்குத் தேவையான உடல் தகுதியுள்ள ஆட்கள் தேவைப்பட்டதால், `கேங்மேன்’ என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது.
