வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது. என தெரிவித்துள்ளது.
திரித்துப் பேசும் உதயநிதி, திராவிட இயக்கம்! தோல் சீலைப் போராட்டம், ஆலயப் பிரவேசத்தில் இதுதான் நடந்தது! உண்மையை உடைக்கும் KSR!
3.45 Minutes Read : மூத்த அரசியலாளரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன வலைதளப் பக்கத்தில்(Blogger) இதுகுறித்து விரிவாகப் பதிவிட்டுள்ளார். அந்தக் கட்டுரையை சற்றே சுருக்கமாகப் பதிவிடுகிறோம். அதில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதல்வர், அமைச்சர் உதயநிதி யாரோ தவறாக எழுதிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு, புரிதல், அறிதல் இல்லாமல் தோல்சீலைப் போராட்டம், பெண்கல்வி, ஆலயப்பிரவேச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது எல்லாம் ‘தங்களின்’ (இவர் பாடுபட்ட) திராவிட இயக்கத்தில் எனப் பிழையாகக் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவும் தொற்று! புதிய வகை கோவிட் பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
உலக நாடுகளை புரட்டிப்போட்ட கோவிட்-19 தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, தற்போது அதன் பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் சில நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ் திரிபுகள் பரவி, அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறித்து உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனோம், உலக நாடுகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
SCERT இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! டிட்டோஜாக் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்கு ஐபெட்டோ ஆதரவு!
ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “29/8/2023 அன்று பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாவது நபர் மதிப்பீடுக்கு பி.எட்., மாணவர்களின் பங்கேற்பினை நிறுத்திக் கொள்வதாக SCERT இயக்குநர் அலைபேசி வழியாக அறிவித்து ஒப்புதல் அளித்தார்.
Mines Mafia-க்களால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு! நெல்லை, தென்காசியில் மலையாளிகள் குவாரி அமைக்க அரசு அனுமதி!
தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து கல், மண் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கேரளத்திற்கு கடத்தப்படுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. தமிழ்நாட்டின் இயற்கையையும், சூழலையும் சீர்குலைக்கும் இச்செயல்களை தடுக்க அரசு கண்டும் காணாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
