Friday, July 4, 2025
Home Blog Page 156

திமுக தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை! நெஞ்சுவலி எனக் கூறியதால் மருத்துவமனையில் அனுமதி!

செவ்வாய்க்கிழமை காலை முதல் இன்று அதிகாலை புதன்கிழமை 2 மணி வரை சுமார் 18 மணி நேர விசாரணைக்குப் பிறகு தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது.

டாஸ்மாக் மதுவில் சயனைடு கலக்கப்படுவது எப்படி? சயனைடு எளிதாக சந்தையில் கிடைக்கிறதா? அரசு விளக்கமளிக்க பாமக வலியுறுத்தல்!

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூரில் இரும்புப்பட்டறை நடத்தி வரும் பழனி குருநாதன், அதில் பணியாற்றி வரும் அவரது நண்பரான பூராசாமி ஆகிய இருவரும் மது குடித்த நிலையில் இறந்த பிறகு உயிரிழந்து கிடந்ததற்கு அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்! பாஜக கூட்டணிக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள் கருத்து!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுகுடித்த இருவர் உயிரிழப்பு! சயனைடு கலந்து மதுகுடித்ததே காரணம் என வழக்கம்போல அரசு அறிவிப்பு!

அண்மையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்த நிலையில், தஞ்சாவூரில், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக திறந்திருந்த டாஸ்மாக் பாரில் கள்ள மது குடித்தவர்கள் இருவர் உயிரிழந்தனர். இவர்கள், மதுவில் சயனைடு கலந்து குடித்து இறந்ததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! 12 இடங்களில் நடக்கும் ரெய்டால் பரபரப்பு!

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் சென்னை, கரூர் வீடுகளிலும் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இருமாப்பில் இருக்கும் திராவக மாடல் ஆட்சியாளர்கள்! மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என ஈபிஎஸ் விமர்சனம்!

அஇஅதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சேலத்தில் மக்கள் நலத் திட்டங்களை நேற்று (11.6.2023) திறந்து வைத்துப் பேசிய நிர்வாகத் திறமையற்ற முதல்வர், மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை என்றும்; மக்கள் விரோதிகளைப் பற்றி பேச ஏது நேரம் என்றும் தனது திருவாயை மலர்ந்திருக்கிறார்.

ரோகித் செய்த பெரும் தவறு..! நம்பர் 1 பவுலரான அஸ்வினை சேர்க்காதது ஏன்? சச்சின் டெண்டுல்கர் கடும் காட்டம்!

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

antalya bayan escort