Sunday, July 6, 2025
Home Blog Page 171

தரமற்ற பொருட்களை வாங்க நிர்ப்பந்தம்! அமைச்சர் பெயரால் மிரட்டல்! வேதனையில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி வார்டன்கள்!

அண்மையில் திறக்கப்பட்ட கூட்டுறவு நுகர்வோர் கடைகளில், தரமற்ற காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஆதி திராவிடர் நல விடுதிகளின் வார்டன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாய்மொழி உத்தரவை மீறி, பிற கூட்டுறவு சங்கங்களில் இருந்து மளிகை பொருட்களை வாங்கும் வார்டன்கள், அதிகாரிகளால் குறிவைக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் சொத்துவரி மீண்டும் 6% உயர்கிறது! ஏற்கெனவே பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இதனைத்தொடந்து தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கட்டிடத்தின் வகை, பரப்பளவுக்கு ஏற்ப 25% முதல், 150% வரை சொத்து வரியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

கரோனா புதிய திரிபு வீரியம் குறைவானது! கிளஸ்டர் பாதிப்பு இல்லை என அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில், கரோனா சிகிச்சை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறதா? என்பது குறித்த ஆய்வு இன்று நடைபெறுகிறது.

இண்டேன் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்! ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் அலட்சியப்போக்கு? Vels Exclusive

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இண்டேன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மெத்தனப்போக்கே இதற்குக் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

பினாமி நிறுவனங்களை போட்டியாளராகக் காட்டி, நிலக்கரி சுரங்க ஏலத்தை எடுத்த அதானி! அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் அதிர்ச்சி!

ஹிண்டன்பர்க் ஆய்வின் மூலம், அதானி குழுமத்துக்கும், குஜராத்தைச் சேர்ந்த ஒரு சிறிய அடிகார்ப்(Adicorp) என்ற நிறுவனத்துக்கும் உடனான தொடர்பு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சோற்றுக்குப் பதிலாக நிலக்கரியை சாப்பிட முடியுமா? மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து பழிவாங்குவதாக விவசாயிகள் குமுறல்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில், நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த டெல்டாக்காரர்தானே மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை தஞ்சாவூர், அரியலூர், கடலூர் ஆகிய பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

antalya bayan escort