இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த நவ. 9-ம் தேதி தொடங்கிய இப்பணிகள் வரும் டிச.8-ம் தேதியுடன் முடிவடைகிறது.
1400 சதுர கிலோ மீட்டர் தமிழக நிலங்களை அபகரிக்க கேரளா முயற்சி! மவுனமாய் வேடிக்கை பார்க்கும் திமுக அரசு!
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம், “கடந்த ஒரு வார காலமாக, கர்நாடகத்திற்கும் மராட்டியத்திற்கும் இடையே எல்லை தொடர்பாக பனிப்போர் நடந்து வருகிறது. 1960 ஆம் ஆண்டிலிருந்து நீண்டு வரும் இந்தச் சண்டை, இப்போது உக்கிரமடைந்திருக்கிறது.
பன்னாட்டு நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி! தர மறுத்ததால் சாலையை சேதப்படுத்தி அட்டகாசம்!
திருவள்ளூர் அருகே பன்னாட்டு நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன், நிறுவனத்திற்கு செல்லும் சாலையை சாலையை சேதப்படுத்தியதாக கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவியின் மகனும், கடம்பத்தூர் ஒன்றிய திமுக பொருளாளருமான தேவா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைகேடுகளை தடுக்காத பள்ளிக் கல்வி ஆணையர்! ஆசிரியர் கூட்டணியின் குற்றச்சாட்டால் கல்வித்துறையில் பெரும் பரபரப்பு!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இயக்கக பணிகளை முற்றிலும் தவிர்த்துக் கொண்டு, மண்டல ஆய்வு என்ற பெயரால் பள்ளிக்கல்வி ஆணையர் தனது தலைமையில் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் படைசூழ பள்ளிகளில் அதிரடி ஆய்வினை தொடர்ச்சியாக நடத்தி வந்தார்.
ரூ.350 மதிப்புள்ள பேனருக்கு ரூ.8,000 கணக்கு! மதுபானம், மருந்து கொள்முதலில் பெரும் ஊழல்! ஆளுநரை உசுப்பிவிட்ட ஈபிஎஸ்!
சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்கள்! பல ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கின!
தமிழகத்தில் காற்றதாழ்வு, காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நேற்று இரவு மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள.