சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகரில் ஊதா(Purple) நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட “செரிவூட்டப்பட்ட பசும்பால்” விநியோகத்தை எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி நேற்று முதல் (01.10.2023) ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக , பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளை! துணைபோகும் பொதுப்பணித்துறை? கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைத்துள்ளது. இங்கு, அரசு அனுமதித்துள்ள அளவைவிட சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வடகடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்! வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கமுதி தேர்தல்! ஊர் கட்டுப்பட்டை மீறிவிட்டதாக போட்டியின்றி தேர்வான கவுன்சிலர் மீது மக்கள் குற்றச்சாட்டு!
கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறை மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இருட்டான ரூமில் தூங்குவதன் அவசியம் பற்றி தெரியுமா? நைட் லேம்ப் போட்டுக்கொண்டு தூங்கக் கூடாதா?
ஒரு மனிதனின் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில் கழிகிறது. உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. இரவில் ஆழ்ந்து உறங்குவது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். அதேநேரம், வெளிச்சத்தில் தூங்குவது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
தாய்ப்பால் எனும் அமுதம்! குழந்தையின் உடல் தன்மைக்கு ஏற்ப சுரக்கும் திரவத் தங்கம்! Nutritional benefits of Breast Milk!
சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன. பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய அறிவியல் யுகம் வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றன.
