Wednesday, February 18, 2026
Home Blog Page 286

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி! கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கும் முதல்வர்!

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையும் வழக்கம் போல எவ்வித தடையும் இன்றி கொண்டாடலாம் என்று அவர் கூறியுள்ளார்.

விஸ்வரூபமெடுக்கும் போதை கலாச்சாரம்! இளைஞரை தாக்கி, சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கஞ்சா கும்பல்!

சென்னையில், பெரியமேடு எம்.வி பத்ரன் தெரு, பெரியண்ணன் மேஸ்திரி தெருவில் தனியார் உணவகம் மற்றும் சலூன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. எம்.வி. பத்ரன் தெருவில் உள்ள உணவகத்திற்கு நேற்று இரவு இளைஞர் ஒருவர் சாப்பிட சென்றார்.

அவுட் சோர்சிங் மூலம் ஓட்டுநர்கள் நியமனம்!“ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்” என்ற நிறுவனம் மூலம் தேர்வு! படிப்படியாக தனியார்மயமாகிறதா அரசு போக்குவரத்துக்கழகம்?

சென்னையைத் தொடர்ந்து, அரசின் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் தனியார் ஓட்டுநர்களை நியமிக்கும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதன்படி, சென்னை, கும்பகோணம், திருச்சி உள்பட 12 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 400 ஒப்பந்த ஒட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

தொண்டரை கையால் செருப்பை எடுத்துவரச் சொன்ன டி.ஆர். பாலு! திமுக பொதுக்குழு கூட்டத்தில் சர்ச்சை!

தி.மு.க., பொதுக்குழு கூட்ட மேடையில், பொருளாளர் டி.ஆர்.பாலுவின் செருப்பை, தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து காலில் மாட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? – இபிஎஸ் கடும் கண்டனம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்த முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள், “எங்கள் உறவினர்களை ஏன் கைது செய்தீர்கள்” எனக் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் இரவுப் பணியில் இருந்த தலமைக் காவலர் பால் பாண்டியை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

இதையறிந்த திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய முற்பட்டார். போலீஸார் அவரை வி.சத்திரப்பட்டி கிராமத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கிராம மக்களுடன் இணைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, காவல்துறையால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை.

முதல்வர் ஸ்டாலினின் நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதல்வரே? காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன், மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &

திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் சாத்துவது ஏன் தெரியுமா? அனந்தாழ்வார் பெருமாளின் மாமனாரானது எப்படி?

2.15 Mins Read : திருமாலின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்ததுடன், பெருமாளின் திருவடிகளே கதி என வாழ்ந்து, அவனின் திருவடிகளை அடைந்தவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். வைணவத்தில் திருமாலின் அம்சமாக கருதப்படுபவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் பெருமாளை போற்றி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் என அழைக்கப்படுகிறது.

விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்கள்! பல ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கின!

தமிழகத்தில் காற்றதாழ்வு, காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நேற்று இரவு மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள.

antalya bayan escort