ஈஷாவின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தமிழகத்தின் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
மீண்டும் ஒரு லாக்அப் டெத்? கல்லூரி மாணவன் மர்ம மரணம்! சாத்தான்குளம் சம்பவத்துக்கு குரல் கொடுத்தவர்கள் எங்கே?
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
யாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என்பதில் காங்கிரசுக்கு குழப்பம்! மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்புகிறார் வைத்திலிங்கம்!
மக்கள் செல்வாக்கு மிகுந்த முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்ட நிலையில், புதுச்சேரியில் எந்தத் தலைவரை முன்னிறுத்துவது என தெரியாமல் காங்கிரஸ் கட்சி திணறுகிறது. எனவே டெல்லி அரசியலுக்கு சென்ற வைத்திலிங்கத்தை, மாநில அரசியலுக்கு அனுப்ப தலைமை முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
அடுத்த வாரம் மழலையர் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்! அலட்சியம் கூடாது என அமைச்சருக்கு பாமக அறிவுரை!
எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழகத்தில் 2,381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை.
அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல விரும்பினால் அனுப்பி வைக்க நடவடிக்கை! அமைச்சர் மஸ்தான் தகவல்!
வேலூர் அருகே மேல் மொணவூர் என்ற இடத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 220 வீடுகளின் கட்டுமான பணிகளை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.
