இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.
திமுக கூட்டணியில் விசிக புறக்கணிக்கப்படுகிறதா? கொதிக்கும் நிர்வாகிகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த மோதல்கள் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக எழுந்துள்ள சலசலப்பு, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் இடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக மாறுதல் முறைகேடு: ஆசிரியர்களின் கண்ணீரும், ஜனநாயகத்தின் கேள்வியும்! ஐபெட்டோ சுளீர்!
அரசியல் களத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உயர்த்திப்பிடிக்கும் ஜனநாயகத்தின் குரல்களை நசுக்கும் விதமாக, தமிழ்நாடு ஆசிரியர்கள் சந்திக்கும் ஒரு பெரும் சவால் தற்போது எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கல்வித்துறை நிர்வாக மாறுதல்களில் நடைபெறும் முறைகேடுகள், ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன.
திமுக சார்பில் முதலியார்பேட்டையில் களம் இறங்குகிறார் சம்பத்! அமைப்பாளர் சிவா முன்னிலையில் விருப்ப மனு அளித்தார்!
பிரபல வழக்கறிஞரும், கலாம் சேவை மைய நிறுவனருமான சம்பத், வரும் சட்டமன்ற தேர்தலில் முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட உள்ளார். இதையொட்டி, மாநில திமுக அமைப்பாளர் சிவா முன்னிலையில், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அவர் விருப்ப மனு அளித்தார்.
கஞ்சா விற்பதில் தகராறு! எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்கள் கைது!
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகச் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கில் அக்கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் சீரழிவு! ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம் என பாமக குற்றச்சாட்டு!
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு சீரழிந்திருப்பதாக ஆய்வுகள் தெரியவந்திருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படாதது தான் இச்சீரழிவுக்கு காரணமாகும்.
