மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை, திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓராயிரம் முறை விவசாயி என சொல்லுவேன்! ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால்!
கரூர்: வெளியேற வழியே இல்லாத இடத்தில்..! Karur Horror: DMK Govt’s Fatal Negligence Exposed – The Hindu.
நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் பேரணியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கரூரில் செப்டம்பர் 27 அன்று திரண்டனர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் தலைவரான விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்ததால், கூட்டம் அதிகரித்ததுடன், அவரது வாகனத்தை நோக்கி மக்கள் முன்னேறினர்.
கோவிட்-19 தடுப்பூசியால் பக்கவிளைவுகள்! யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது? என்ன சொல்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்?
கோவிட்-19 தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக மக்கள் மத்தியில் அச்சம் பரப்பப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோரும் மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை விதைக்கின்றனர். கோவிட்-19 தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? லாக்டவுண் மட்டுமே தீர்வாகுமா? ‘வேல்ஸ்’ சிறப்புப் பார்வை!
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் விகிதம் மிகத் தீவிரமாக உள்ள நிலையில், பெருந்தொற்றை கட்டுப்படுத்த லாக்டவுண் மட்டுமே போதுமானதா? மத்திய அரசு, அதிகாரத்தை தன்னகத்தே குவிப்பது சரியா?
1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? இல்லையா? குழப்பத்தை தீர்த்தது தமிழக அரசு!
கரோனா தொற்று பரவல் குறைந்துவந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனிடையே, கரோனா பரவல் காரணமாக டிசம்பர் பாதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
பின்னர் தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், ஜனவரியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதனிடையே, இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

அண்மையில், புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பிய குறிப்பாணையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மணவர்களுக்கும் தேர்ச்சி தரப்பட வேண்டும். வரும் மே 15-ம் தேதிக்குள் தேர்ச்சி பட்டியலை ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கு குறைவான வருகை பதிவேடு, பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை போன்ற காரணங்களைக் காட்டி மாணவர்களை வெளியேற்றக் கூடாது. 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வரும் 30-ம் தேதி முதல் தொடங்கும்” என்று அறிவித்துள்ளது.
இதேபோல், தமிழகத்திலும் ஆல் பாஸ் அறிவிப்பு வெளியாகுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.
மேலும், 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 1-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
