உடல் அழற்சி அல்லது வீக்கம் (Inflammation) என்பது நம் உடலில் ஏற்படும் ஒரு இயல்பான, பாதுகாப்பு எதிர்வினை. காயம் ஏற்பட்டாலோ, தொற்று ஏற்பட்டாலோ, அல்லது ஏதேனும் ஒரு பாதிப்பு வந்தாலோ, உடல் தானாகவே அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடும். இந்த முயற்சியின் ஒரு பகுதிதான் அழற்சி.
கண் இமைகளின் அமைப்பு வெளிப்படுத்தும் ஆளுமைப் பண்புகள், குணாதிசயங்கள்!
மனிதர்களின் உதடுகள், கண்கள், புருவங்கள் மற்றும் முக வடிவம் போன்றவை ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். இவை மனிதர்களின் ஆளுமைத் தன்மைகளை வெளிப்படுத்தும். மனிதர்களின் கண் இமைகளின் அமைப்புகள் அவர்களின் குணாதிசயங்களையும், ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன.
நிதியமைச்சர், கல்வி அமைச்சர் முரண்பட்ட கருத்து! போராடத் தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்!
பன்முகத் தன்மை உடைய பல்வேறு அறிவிப்புகளை, சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் தொடர்ந்து அறிவித்து வந்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டுள்ளார் என தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.
சிம்ப்பிள் வைத்தியம், ஆனா தரமான வைத்திய குறிப்புகள்
நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்திக்க நேரிடுகிறது. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில எளிமையான சித்து மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.
அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.
வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
மூச்சுப்பிடிப்பு:
கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சருமநோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.
தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
கருணாநிதியின் அரசாணையை நிராகரிப்பது நியாயமா? அரசுக்கெதிரான மனக்குமுறலை வெளிப்படுத்தும் அரசு மருத்துவர்கள்!
“2009-ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில், அரசு மருத்துவர்கள் நலன் மற்றும் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மறுத்து வருவது வேதனையாக உள்ளது” என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
