மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள உலகத் தலைவர்களை பாரத் மண்டபத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் வைத்து பிரதமர் மோடி வரவேற்றார்.
பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது! திமுக அரசு மதப்பிரச்சனைகளை உருவாக்குகிறது!
சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சங்கிகளை அண்டி, ஒன்றி பிழைக்க திமுக அச்சாரம் போட்டாச்சு! டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம்!
இனி மோடி அரசை அண்டி இருந்தால் மட்டுமே ’ஆட்சி பிழைக்கும்’ என்ற நிலை உருவான பின்பு, எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே பணிந்தும், குனிந்தும் நடக்க திமுகவினர் ஆயத்தமாகி விட்டதையே இன்று சட்டமன்றத்தில் நடைபெறும் படத்திறப்பு விழா வெளிப்படுத்துகிறது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்திருக்கிறார்.
ராகுல் யாத்திரைக்காக பண வசூல்! ஃபேஸ் புக்கில் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் சண்டை!
‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, தமிழகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கேரளாவிற்கு சென்றார். தமிழகத்தில் முடிவுற்ற யாத்திரைக்கான ஏற்பாடு, பணம் வசூல் தொடர்பாக மாநில துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி, கரூர் எம்.பி. ஜோதிமணி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை… இந்த 9 பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! ரகசியமாக செய்வதாக நினைத்து சிக்கிடாதீங்க! தப்பவே முடியாது, கவனம்..!
நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம். ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் “ரகசியம்” அல்ல என்பதும், அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால், நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்துவிட முடியாது.
வாசிப்பை நேசித்த எவரையும் உலகம் நிராகரித்ததில்லை! நூலகர் தினவிழாவில் நெகிழ்ச்சி!
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் திருக்கோவலூர் முழுநேர கிளை நூலகத்தில் இன்று நூலகர் தின விழா நடைபெற்றது.
பிரச்னைகளுக்குத் தீர்வு ஆன்மிகம் மட்டும்தானா? ஆன்மிகப் பாதையில் இருந்து விலகத் தூண்டுவது எது? Part – 1
1.40 Min Read : நம் எண்ணங்கள்தான் நம்மை இயக்குகின்றன. ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் தோன்றினாலும், அடிப்படையில் இந்த எண்ணங்கள் அனைத்தையும் இரண்டு வகைகளாக அடக்கமுடியும். ஒன்று, நம்மை இயக்கும் சக்தியான பரம்பொருளைப் பற்றிய சிந்தனை (இது சில நேரங்களில், சிலருக்கு மட்டும்). இரண்டாவது, நம் வாழ்க்கையைப் பற்றியது. இந்த இரண்டு சிந்தனைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாம் யோசிப்பதில்லை.
