Sunday, March 1, 2026
Home Blog Page 3

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்! ஹை குவாலிட்டி ஃபோட்டோக்களை தரம் குறையாமல் அனுப்ப வசதி! WhatsApp Udpate!

பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலியாக இருந்து வரும் வாட்ஸ்அப்பில் தரம் குறையாத போட்டோக்களை அனுப்ப முடியாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது.

பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை புலனப் பதிவாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய ஆட்சியாளர்களால் தையல் ஓவியம் உடற்கல்வி கணினி இசை என 16 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த எண்ணிக்கையில் இறந்தவர்கள், ஊதிய பற்றாக்குறையால் பணியை விட்டு விலகியவர்கள் என 4000 பேர் இப்போது பணியில் இல்லை. எஞ்சியுள்ள 12000 பேர் தான் இப்போது பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தான் போராடி வருகிறார்கள்.

AIFETO Annamalai

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என 52,000 பேர் பணியமனம் செய்யப்பட்டார்கள். கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைவருடைய வேண்டுகோளினையும் ஏற்று கொண்டதோடு அவர்களின் ஊதியப் பாதிப்பினையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒரே கையெழுத்தில் அவர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவந்து பணிவரன் முறை செய்து ஆணை வழங்கினார். நெஞ்சிருக்கும் வரை எவராலும் இதை மறக்கத்தான் முடியுமா?

கருணாநிதியின் மகனாக, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் இந்த 12 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களை முழு நேர சிறப்பாசிரியர்களாக ஆணை வழங்கி உதவிடுமாறு பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவும், ஆட்சியின் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

Also Read : எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கருத்தாளர்களை நியமிப்பதில் விதிமீறல்! சட்ட நடவடிக்கைக்கு தயார் என ஐபெட்டோ அறிவிப்பு!

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நாங்கள் போராடுகிற பொழுது, என் பெயருக்கு முன்னால் உள்ள கருணை என்னிடம் நிறைய இருக்கிறது, ஆனால் பின்னால் உள்ள அந்த இரண்டு எழுத்து (நிதி) என்னிடம் இல்லையே என்று நகைச்சுவையாக பேசுவார். ஆனால் அவரது காலத்தில்தான் நான்கு ஊதிய குழுக்களை அமல்படுத்தினார். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்தார்.

தங்கள் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட ஏதாவது சிலவற்றையாவது செய்து கருணாநிதி அரசின் சரித்திரத்தினை தொடர வேண்டுமாய் மீண்டும் மீண்டும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு முதலமைச்சர்… ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்ற வரலாற்று பதிவு ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Also Read : பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியம்!

முன்னதாக, தமிழகத்தில் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆட்சியின்போதே பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தி வந்தனர். அப்போதைய போராட்டங்களில் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நேரடியாக கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Part-time teachers arrested by police and detained at Rajarathinam Stadium in Chennai.

மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் 181 நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்காக திரண்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

இரட்டைத் தலைமையால் பெரும் சரிவு! கரையான் போல அரிக்கும் பாஜக! தலைமை மாற்றத்தை நோக்கி அதிமுக!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள படுதோல்வி, அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தோல்வி தலைமை மாற்றத்திற்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கி இருப்பதாக தெரிகிறது.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பலன்கள்! Health Benefits of Peanuts!

டிவி பார்த்துக்கொண்டோ அல்லது கடற்கரையில் அமர்ந்து அரட்டை அடித்தபடியோ கொரிக்கப்படும் நிலக்கடலை அல்லது வேர்க்கடலையை அல்லது மணிலாகொட்டையை தினசரி எடுத்துக் கொள்ளலாமா? தினசரி நிலக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை! ஆந்திராவுக்கு நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையிலும் கனமழை பெய்யவில்லை. வானம் வெளிவாங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே மிக லேசான மழையே பெய்கிறது.

வட்டி விகிதம் குறைந்தால் வீட்டுக் கடனாளிகள் என்ன செய்ய வேண்டும்? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 6-ம் தேதியன்று வங்கிகளுக்கான ரெபோ வட்டி விகிதங்களை 6 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. அதேபோல கேஷ் ரிசர்வ் ரேஷியோவையும் 4 சதவீதத்தில் இருந்து மூன்று சதவீதமாக குறைத்துள்ளது.

சென்னையில் பகல் நேரத்தில் ரவுடிகள் மோதல்! – தமிழகம் ரவுடிகளின் சாம்ராஜ்யமா? EPS-ன் ஆவேச கேள்வி!

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் ரவுடிகள் வெளியில் கத்திகளுடன் விரட்டி மோதிக்கொண்ட சம்பவங்கள் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் பதிவொன்றை வெளியிட்டு திமுக அரசை தீவிரமாக கண்டித்துள்ளார்.

antalya bayan escort