திருட்டு வழக்குப் போட்டு போலீசார் துன்புறுத்துவதாக பழங்குடியின மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு! இறுதியாண்டு தேர்வை நேரடியாக நடத்த அரசு முடிவு!
பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும் எனறு அவர் கூறியுள்ளார்.
10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகளிலும் கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்லலாம்! ஐகோர்ட் அனுமதி!
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த `இந்தியன் டிரைவர்ஸ் சொசைட்டி’ பொதுச் செயலாளர் நாகராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கேரளா மற்றும் தமிழகம் முழுமைக்கும் வாகனங்களை இயக்குகிறோம். கேரளாவின் பெரும்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், பெரும்பாலான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.