இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை `சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த திமுக அரசு பிறப்பித்துள்ளது.
வெப்ப அலைக்கு நடுவே மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு! விருதுநகர் ஆட்சியர் உத்தரவால் கடும் சர்ச்சை! உடனடியாக ரத்து செய்ய ஐபெட்டோ வலியுறுத்தல்!
சுட்டெரிக்கும் வெயில், வெப்ப அலையை பொருட்படுத்தாமல், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் உத்தரவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
15 மாநிலங்களில் அதிரடி சோதனை! PFI அமைப்பினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கைது!
தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த சுமார் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரூ.1,800 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு ஐ.டி. நோட்டீஸ்! கட்சியை திவாலாக்க மோடி முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!
1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடி செலுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மன அமைதியை தேடுகிறீர்களா? உங்கள் தினசரி வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த 3 நிமிடம்!
பரபரப்பான இந்த உலகில், அமைதியையும் ஆனந்தத்தையும் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், வெறும் மூன்று நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் மன நிம்மதியைப் பெறலாம் என்கிறது ஒரு எளிய தத்துவம். கடமைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள் என மூழ்கித் தவிக்கும் நமக்கு, இந்த மூன்று நிமிடங்கள் எப்படி உதவும் என்பதை ஒரு நெகிழ்ச்சியான கதை மூலம் புரிந்துகொள்வோம்.
மகனுக்கு, சந்திரசேகர் எனப் பெயர் சூட்டிய எலான் மஸ்க்! மத்திய அமைச்சர் பகிர்ந்த சுவாரசியத் தகவல்!
டெஸ்லா உரிமையாளரும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான எலோன் மஸ்க் தனது மகனுக்கு சந்திரசேகர் என்று பெயர் வைத்துள்ளார். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது சமூக வலைதளத்தில் இதனை உறுதி செய்துள்ளார்.
