’தி.மு.க. அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால்…’ என்று சொல்லும் தகுதியோ யோக்கிதையோ மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் போன்றோருக்கு இல்லை’ என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
#BREAKING தேச துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது! விசாரணைக்கும் தடை! உச்சநீதிமன்றம் அதிரடி!
தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், ஆங்கிலேயர் காலத்தில் இந்திய மக்களை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவை 124(A) ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மோசடிப் புகாரில் தனியார் நிதி நிறுவனம்! 21 இடங்களில் அதிரடி ரெய்டு! உரிமையாளர் வீட்டுக்கு சீல்!
வேலூரைத் தலைமையிடமாக கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்(IFS) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். 15 தினங்களாக இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டு இருப்பதால் இதில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
க. அரவிந்த் குமாரின் ‘காட்டாயி’ சிறுகதைத் தொகுப்பு! சென்னையில் நாளை வெளியிடுகிறார் பாரதிராஜா!
மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான க. அரவிந்த் குமார் ‘காட்டாயி’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியிருக்கிறார். உறவுகளை கையாள்வதில் மனிதன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் காட்டாயி சிறுகதை தொகுப்பு. இந்தப் புத்தகத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பெற்றுக்கொள்கிறார்.
பப்பாளியில் பொதிந்து கிடக்கும் வைட்டமின் சத்துகள்! எப்போது பப்பாளிப் பழம் சாப்பிடலாம்?
மரமாக வளரும் பப்பாளியின் தாயகம் மெக்ஸிகோ. உஷ்ண மண்டல நாடுகளில் எல்லாம் இது பயிராகிறது. இதில் பலவகைகள் உள்ளன. பப்பாளிப்பழம் ஒருவித தனிப்பட்ட மணமுள்ளது. பழம் மஞ்சள் நிறமாக இருக்கும், வருடம் முழுவதும் இம்மரம் பலன் தரும், விதையே இல்லாத ஒருவகைப் பழமும் உண்டு. இப்பழத்தில் வைட்டமின் சத்து அதிகம் இருக்கிறது.
அசர வைக்கும் டெல்லி அரசுப் பள்ளிகள்! நவீன வசதிகளுடன் புதிய கற்பித்தல் முறை! தமிழகத்திலும் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவிப்பு!
டெல்லியில் நவீன வசதிகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளியைப் போல தமிழகத்திலும் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சொத்துவரி மீண்டும் 6% உயர்கிறது! ஏற்கெனவே பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இதனைத்தொடந்து தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கட்டிடத்தின் வகை, பரப்பளவுக்கு ஏற்ப 25% முதல், 150% வரை சொத்து வரியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
