Tuesday, March 17, 2026
Home Blog Page 177

சுட்டெரிக்கும் வெயில்! அச்சுறுத்தும் ‘வெட் பல்ப் வெப்பநிலை’! மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக தொடருகிறது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி வருகிறது. கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள்? ஊதியம் வழங்கவில்லை எனப் போராட்டம்! அமைச்சர் விளக்கத்தால் பரபரப்பு!

சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில், சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஐஸ்க்ரீம் பேக்கேஜிங் பிரிவில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பள்ளிக்கல்வி ஆணையரகம்’ என்பதை உடனடியாக நீக்குங்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்!

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவி தொடங்கிய காலத்தில் இருந்து, அந்தப் பதவி, பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் புலனப் பதிவுகள் வழியாக முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் அன்றைய முதன்மைச் செயலாளர்-1 த.உதயசந்திரன் இ.ஆ.ப., ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

கள்ளச்சாராயம், சட்டவிரோத பார்களுக்கு ஆதரவு! அமைச்சர் செஞ்சி மஸ்தானை உடனடியாக நீக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்..! கங்கையே சூதகமானால் என்ன செய்வது? என்பதற்கு ஏற்றார்போல், தற்போது நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.

நீதிமன்றத்திற்குள் புகுந்து எதிரியை சரமாரியாக வெட்டிய ரவுடி! கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு!

ராமநாதபுரம் சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த சந்துரு என்பவரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

Odisha Train Accident: 280க்கும் அதிகமானோரை பலிகொண்ட கோரமான ரயில் விபத்து! தமிழர்கள் 35 பேர் பலியானதாக தகவல்!

இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட இந்த கோர விபத்து, ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது. பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் விபத்து நடந்ததாக தகவல் தெரிவிக்கிறது.

மின் கட்டணம் மீண்டும் உயருகிறது? ஜுலை 1 முதல் 4.7% அதிகரிக்கப்படலாம் என தகவல்!

நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் பயன்பாடு மற்றும் புதிய இணைப்பு கட்டணத்தை உயர்த்த தமிழக மின் வாரியம் தீர்மானித்தது. அதற்காக, 2022 ஜூலை 18ல், ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்தது. மக்களிடம் கருத்து கேட்ட பின், கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல், 35 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டது.

antalya bayan escort