அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 10,32,592 சைக்கிள்களை வாங்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. மாணவர்களுக்கான சைக்கிள் விலை – ரூ. 5,279/- மற்றும் மாணவிகளுக்காக வாங்கப்படும் சைக்கிள் விலை – ரூ. 5092/-
4 ஆண்டுகளில் டீசல் வாகனங்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு எரிசக்தி மாற்றத்திற்கான குழு பரிந்துரை!
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் பெருமளவு இயங்குகின்றன. அதே நேரத்தில், மின்சார வாகனங்களின் சகாப்தம் தொடங்கியுள்ளது. மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், டீசல் வாகனங்களை தடை செய்வது குறித்து விவாதம் நடந்து வருகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை அரசு இன்னும் ஏற்கவில்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
டிஆர்பி ராஜா அமைச்சராக்கப்பட்டதால் டெல்டா திமுகவில் சலசலப்பு! பூண்டி கலைவாணன் அப்செட்! ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பு!
கடந்த சில வாரங்களாகவே, தி.மு.க அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகள் தி.மு.க-வினரை பரபரக்க செய்திருந்தன. இந்தச் சூழலில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ துரை. சந்திரசேகரன், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கலைவாணன், அரசு கொறடா கோ.வி.செழியன் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏக்களிடையே அமைச்சர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.
உதயசந்திரன் அச்சுறுத்துகிறார்; முதல்வர் கண்டுகொள்ளவில்லை! மாநிலக் கல்விக்கொள்கை குழுவிலிருந்து விலகுகிறேன்- ஜவஹர் நேசன்
இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக்கொள்கை, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட, தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களை கொண்டிருக்கின்ற தேசியக்கொள்கை 2020-ன் மற்றொரு வடிவமாகவே இருக்கும் என முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனிமவளங்கள் கடத்துபவர்களிடம் முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசூல்! எஸ்.பி. வேலுமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மழையினால் டெல்டா மாவட்டங்களில் பருத்தி, எள் சேதம்! உரிய நிவாரணம் வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!
கோடை மழையினால் டெல்டா மாவட்டங்களில் சேதம் அடைந்த பருத்தி, எள் பயிர்களுக்கான நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
