இகாடா மற்றும் டிகாடாவின் சாகசங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இரண்டு குறும்புத்தனமான, நல்ல உள்ளம் கொண்ட குழந்தைகளைப் பற்றி பிரபல குழந்தைகள் புத்தக எழுத்தாளரும், கதை சொல்லியுமான சித்ரா ராகவன் ‘இகாடா & டிகாடா’ என்ற பெயரில் தொடர் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் தமிழின விரோதப்போக்கு! தமிழ்நாட்டில் திறமையான இளம் வீரர்களே இல்லையா? என்ன செய்கிறது #TNCA?
தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியைத் தடை செய்ய வேண்டும் என பேரவையில் பாமக எம்.எல்.ஏ. கோரிக்கை வைக்க, கிரிக்கெட் ஆர்வலர்களைத் தாண்டி மக்கள் மத்தியிலும் இது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. TNCA எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் என்ன செய்துகொண்டிருக்கிறது? என்ற கேள்வியும் இதனூடே எழுகிறது.
அவுட் சோர்சிங் மூலம் ஓட்டுநர்கள் நியமனம்!“ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீசஸ்” என்ற நிறுவனம் மூலம் தேர்வு! படிப்படியாக தனியார்மயமாகிறதா அரசு போக்குவரத்துக்கழகம்?
சென்னையைத் தொடர்ந்து, அரசின் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் தனியார் ஓட்டுநர்களை நியமிக்கும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இதன்படி, சென்னை, கும்பகோணம், திருச்சி உள்பட 12 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 400 ஒப்பந்த ஒட்டுநர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் குளறுபடி! கருணை அடிப்படையில் 5 மதிப்பெண்கள் வழங்க வலியுறுத்தல்!
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு ஆங்கிலப் பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. பொதுத் தேர்வுக்கு முன்பான காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வு போன்றவற்றில் இருந்து மாறுபட்டு பொதுத்தேர்வில் வினாக்கள் கேட்கப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
தரமற்ற பொருட்களை வாங்க நிர்ப்பந்தம்! அமைச்சர் பெயரால் மிரட்டல்! வேதனையில் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி வார்டன்கள்!
அண்மையில் திறக்கப்பட்ட கூட்டுறவு நுகர்வோர் கடைகளில், தரமற்ற காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படுவதாக சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஆதி திராவிடர் நல விடுதிகளின் வார்டன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வாய்மொழி உத்தரவை மீறி, பிற கூட்டுறவு சங்கங்களில் இருந்து மளிகை பொருட்களை வாங்கும் வார்டன்கள், அதிகாரிகளால் குறிவைக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் சொத்துவரி மீண்டும் 6% உயர்கிறது! ஏற்கெனவே பலமடங்கு உயர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாமல் இருந்தது. இதனைத்தொடந்து தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கட்டிடத்தின் வகை, பரப்பளவுக்கு ஏற்ப 25% முதல், 150% வரை சொத்து வரியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
