Wednesday, March 18, 2026
Home Blog Page 197

16-ந் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது! பம்பையை சுத்தம் செய்யும் பணியில் தமிழக பக்தர்கள்!

சபரிமலை அய்யன் கோயில் நடை மகரவிளக்கு தரிசனத்திற்காக வரும் 16-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளில் கேரள தேவசம்போர்டு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. பம்பை ஆற்றை சுத்தம் செய்ய தமிழக பக்தர்கள் முகாமிட்டுள்ளனர்.

குதிரையேற்ற போட்டியில் அசத்தும் இளம் வீராங்கனைகள்! மீண்டும் தங்கம் வென்று அசத்தல்!

FEI World Equestrian Dressage Challenge 2022 குதிரையேற்றப் போட்டியில் சென்னையின் இளம் வீராங்கனைகள் புதிய உச்சத்தை தொட்டதுடன், மீண்டும் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள ஏஎஸ்சி மையத்தில் கடந்த வாரம் இந்தப் போட்டி நடைபெற்றது.

#EWS சட்டத்தை உருவாக்க துணைபுரிந்த திமுக இப்போது இரட்டை வேடம் போடுகிறது! அதிமுக கண்டனம்!

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”எம்.ஜி.ஆர், தனது திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல, அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது கனவில் மிதந்து வருகிறார்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நீடிக்கும் மழை! சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர்! மக்கள் அவதி!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே இது நாளை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை 115 நிறுத்திவைப்பு! 69 விழுக்காடு இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டுள்ளதாக ஆசிரியர் கூட்டணி கருத்து!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

35 ரூபாயாக இருந்த கரன்ட் பில், இப்போது 2 ஆயிரம் ரூபாய்! அதிரவைக்கும் மின்வாரியம்! இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு!

மின் கட்டணத்தைக் கண்டு நுகர்வோர் அரண்டு போயிருக்கின்றனர். குறிப்பாக அடுக்கு மாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததுள்ளதாக நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் வேலையை தமிழக மின்வாரியம் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

#NIA Raid | 45 இடங்களில் அதிரடி சோதனை! 18 பேருக்கு ISIS இயக்கத்துடன் தொடர்பிருப்பது கண்டுபிடிப்பு!

சென்னை, கோவை, நாகை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 45 இடங்களில் தேசிய புலனாய்வு ( என்.ஐ.ஏ.,) படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் நடந்த கார்குண்டு வெடிப்பு காரணமாக இது தொடர்பாக கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்து வருவதாக தெரிகிறது. அதிகாலை 4.20 மணி முதலே சோதனை நடந்து வருகிறது.

antalya bayan escort