மழலையர் வகுப்புகளை சிறப்பாக நடத்துவது எவ்வாறு?, தொடக்கக் கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்? அரசுப் பள்ளிகளின் தரத்தை எப்படி உயர்த்தலாம்? போன்றவற்றுக்கு சிறப்பான யோசனையை தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசுக்கு முன்வைத்துள்ளது.
பள்ளிகள் நாளை திறப்பு! 1450 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
கோடை விடுமுறை முடிந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் ஒருவாரத்திற்குப் பாடங்களுக்குப் பதிலாக புத்துணர்ச்சிப் பயிற்சிகள் வழங்கப்படும் என கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனால் மாணவ, மாணவிகளும் பள்ளிக்குச் செல்ல ஏதுவாக உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படுகிறது! திமுக அரசு மதப்பிரச்சனைகளை உருவாக்குகிறது!
சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிகச் சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சராகிறார் நமச்சிவாயம்! அமித் ஷாவின் ‘மிஷன் சவுத்’! பாஜக போட்டுள்ள அடடே பிளான்!
தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. அதிலும் கடந்த தேர்தலில் பாஜகவால் பெரும்பான்மை பெற முடியவில்லை. அங்கு பாஜக எப்படி ஆட்சியை அமைத்து என அனைவருக்கும் தெரியும். எனவே தென்மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த ‘மிஷன் சவுத்’ என்ற திட்டத்தை பாஜக கையிலெடுத்துள்ளது.
ஆன்லைன் ரம்மிக்கு தடை! அவசரச் சட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் குழு அமைப்பு!
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.
ஆசிரியர்கள் முதல் அதிகாரிகள் வரை கடுமையான மன அழுத்தம்! உயிர் பலியும் ஏற்படுவதால் கல்வித்துறையில் கலக்கம்!
எண்ணும் எழுத்தும் தெரியாதவர்கள் எவரும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கவில்லை. எண்ணும் எழுத்து பயிற்சி ஒன்றும் இராணுவப் பயிற்சி அல்ல. இந்தப் பயிற்சிக்காக கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் ஆசிரியர்கள் இருவர் பலியாகிவிட்டனர். இதற்கு காரணமானவர்கள் மீது கொடுங்குற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
