“பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, அரசுப் பள்ளிகளில் மழலையர் (LKG, UKG) வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மலக்குடல் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு! மருத்துவ உலகில் புதிய மைல் கல்!
மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து ஆறு மாதம் எடுத்துக் கொண்ட பிறகு முற்றிலுமாக குணமடைந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
த்ரில்லர் காட்சிகளுடன் ‘சுழல்’ வெப் சீரிஸ்! பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் என நட்சத்திர பட்டாளங்கள்!
இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. இத்தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு தண்டனை! அச்சத்தில் ஈரான் சன்னி பிரிவு சிறுபான்மையினர்!
ஒரே நாளில் பெண் உள்பட 12 பேருக்கு ஈரான அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இதுபற்றி அரசோ, உள்ளூர் ஊடகங்களோ வாய் திறக்காத நிலையில், நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (Iran Human Rights – IHR) இதனை அம்பலப்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 9-வது சமத்துவபுரம்! முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சிவகங்கை மாவட்டம், கோட்டை வேங்கைப்பட்டியில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி உயர்கிறது! பணவீக்கம் அதிகரிப்பால் RBI முடிவு!
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
