பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியதிலிருந்து அனைத்து வங்கிகளும் வட்டியை உயர்த்தியுள்ளன. இதில் ஜூன்1ம் தேதி முதல் ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.
அரசுப் பள்ளி ஆசிரியர்களை காயப்படுத்துவதா? வசந்திதேவிக்கு ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குறித்து மூத்த கல்வியாளர் வசந்திதேவி எழுதிய கட்டுரைக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பின் மூத்த தலைவர் வா. அண்ணாமலை, தலைமைச் செயலாளர் வெ. இறையன்புக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.
பாஜக மீது அதிமுக சரமாரி விமர்சனம்! பா.ஜ.க இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு!
காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழ்நாடு பா.ஜ.க மக்களுக்காக குரல் எழுப்பவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க நிலைப்பாடு குறித்து சமூக ஊடகங்கள் மூலம் அ.தி.மு.க-வினர் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.
சோகத்தில் முடிந்த கறிவிருந்து! 100 பேருக்கு வாந்தி, மயக்கம்! மணலூர்ப்பேட்டை அருகே பரபரப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்ப்பேட்டையை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜா(37) என்பவர் கரும்பு வெட்டும் பணிக்கான மேஸ்திரியாக இருந்து வருகிறார். கரும்பு வெட்டும் சீசன் முடிந்ததும், கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலில் பொங்கல் வைத்து, கரும்பு வெட்டிய தொழிலாளர்களுக்கு கறி விருந்து கொடுப்பது அவரது வழக்கம்.
சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது! உயிர் பயத்தில் அரசு அதிகாரிகள்! ஓபிஎஸ் கண்டனம்!
இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டுமென்றால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டுமென்றால், அதற்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சட்டம்-ஒழுங்கு.
யு டியூபர் நிதி மோசடி வழக்கு! வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை! கஸ்டடி எடுக்க போலீஸ் தீவிரம்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருக்கடையூரில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்! கங்கை அமரன், பாரதிராஜா பங்கேற்பு!
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சதாபிஷேகம் நடைபெற்றது.
