சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை! வரவேற்கும் திமுக; எதிர்க்கும் காங்கிரஸ்! போராட்டம் அறிவிப்பு!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பம் மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளனர்.
பேரறிவாளன் விடுதலை! ஜெ. சிந்தனைக்கு கிடைத்த வெற்றி! ஓபிஎஸ், ஈபிஸ் பெருமிதம்!
30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது என்று அதிமுக தெரிவித்துள்ளது.
குஜராத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு! முக்கிய தலைவர் விலகல்! ராகுல் மீது கடும் விமர்சனம்!
படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு போராட்டங்களை தலைமை ஏற்று நடத்திய ஹர்திக் படேல், மத்திய – மாநில பாஜக அரசுகளுக்குக் கடும் தலைவலியாக உருவெடுத்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரைக் கட்சியில் சேர்த்தார்.
#Timeline: Perarivalan’s arrest and release; வழக்கு முதல் விடுதலை வரை! பேரறிவாளன் நீண்ட பயணம்!
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
#Breaking: பேரறிவாளன் விடுதலை! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது.
