இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் திரிகோணமலை பகுதியில் உள்ள காட்டு பங்களாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சேவும் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING தேச துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது! விசாரணைக்கும் தடை! உச்சநீதிமன்றம் அதிரடி!
தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், ஆங்கிலேயர் காலத்தில் இந்திய மக்களை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவை 124(A) ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
டான்ஜெட்கோவுக்கு ரூ.1,000 கோடி கூடுதல் வட்டிச்சுமை! தமிழக அரசும் காரணம் என்கிறது சிஏஜி!
உதய் மின் திட்ட விவகாரத்தில், டான்ஜெட்கோவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததால், டான்ஜெட்கோவுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வட்டிச்சுமை ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிக்கினர்! வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!
இளையராஜா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊடகங்கள் ‘யு டர்ன்’ அடித்துவிடும்! எச்சரிக்கையாக இருங்கள் முதல்வரே! ஊடகரின் மனம் திறந்த மடல்!
வணக்கம் ஐயா,
தங்களின் திராவிட ஸ்டாக், திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு காலத்தைப் பார்த்தவுடன் இந்த மடலை எழுதும் உந்துதல் ஏற்பட்டது.
நிதியமைச்சர், கல்வி அமைச்சர் முரண்பட்ட கருத்து! போராடத் தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்!
பன்முகத் தன்மை உடைய பல்வேறு அறிவிப்புகளை, சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் தொடர்ந்து அறிவித்து வந்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டுள்ளார் என தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சித்துள்ளது.
