வார விடுமுறை தினம் என்றாலே ஞாயிற்றுக் கிழமைதான் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலேயர்கள் தங்கள் வழிபாட்டுக்கு வசதியாக நிர்ணயித்துக் கொண்டதொரு தினத்தை, நாம் ஏன் இன்னமும் பின்பற்ற வேண்டும்?
இலங்கையில் உணவுப்பஞ்சம்! அரிசி கிலோ ரூ. 448, பால் லிட்டர் ரூ.263, ஒரு முட்டை ரூ.28! தவிக்கும் மக்கள்!
கொரோனாவைத் தொடர்ந்து இலங்கையில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகியிருக்கிறது. அரசாங்கத்தின் டாலர் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. அத்தியாவசியமான எரிபொருளைக் கொள்முதல் செய்யக்கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை.
அரசின் குறிக்கோள் தொழிற்பேட்டையா?, இரும்புத்தாதா? 1,200 ஏக்கர் விளை நிலத்தை வாரிச்சுருட்டப்போகும் தமிழக அரசு!
1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து, பத்துக்கு மேற்பட்ட கிராமங்களின் 500 வீடுகளை தகர்த்து, ஏரிகளையும், ஓடைகளையும் நிர்மூலமாக்கி திருவண்ணாமலையில் திமுக அரசு சிப்காட் அமைக்கிறது. விளை நிலத்தை காப்பதற்காக மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது? மனிதநேயமின்றி செயல்படும் பள்ளிக்கல்வி ஆணையர்! கூனிக்குறுகுவதாக குமுறும் ஆசிரியர்கள்!
90% விழுக்காடு பெண் ஆசிரியர்கள், கலைஞர் நீண்டகாலமாக சம்பாதித்து வைத்திருந்த வாக்கு வங்கியில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பணிச் சுமையால் அவர்கள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவரும், தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஐ.சி.யு.-வில் காங்கிரஸ்! உ.பி.யில் 387 இடங்களில் டெபாசிட் காலி! மக்கள் நிராகரித்த மத அரசியல்! விஸ்வரூபமெடுக்கும் ஆம் ஆத்மி!
ஐந்து மாநில தேர்தலில் பெற்ற மோசமான தோல்வியால், காங்கிரஸ் பல வகையிலும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. காங்கிரஸ் முன்வைத்த சாதி – மத அரசியலை மக்கள் நிராகரித்துவிட்ட நிலையில், குலாம் நபி ஆஸாத், கபில் சிபல் உள்பட அதிருப்தி தலைவர்கள்(G23 தலைவர்கள்) சோனியா காந்தியின் தலைமைக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை! சேது சமுத்திர திட்டத்தை யாராலும் தொட முடியாது! சுப்ரமணியன் சுவாமி!
பாஜக மிக ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! புரோக்கராக செயல்படும் மூதாட்டி! போலீஸிடம் சிக்கிய தம்பதி!
பிறந்த மூன்று நாட்களேயான குழந்தையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்திச் சென்ற தம்பதியினரை ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். கண்காணிப்பு குறைபாடே திருட்டுக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பலந்தை கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி சுஜாதாவுக்கு மூன்று நாட்களுக்கு முன், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகப்பேறு பிரிவுக்குச் சென்று அந்தக் குழந்தையை திருடிக்கு கொண்டு இருவர் தப்ப முயன்றுள்ளனர்.

Also Read : நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!
குழந்தை காணவில்லை என்பதை உடனடியாக உணர்ந்த சுஜாதா கூச்சல் போட்டுள்ளார். குழந்தையைத் திருடிய தம்பதி, மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறி பேருந்து நிலையத்திற்கு செல்ல முற்படும்போதே, சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், குழந்தையைத் திருடி வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக விஷ்ணுகாந்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், குழந்தையை திருடிச்சென்ற தம்பதியை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர்களது பெயர் ராமு – சத்யா என்பது தெரியவந்தது. மகப்பேறு வளாகத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்ததாகவும், குழந்தையை வாங்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனை வளாகத்தைவிட்டு சென்றுவிட வேண்டும் என அந்த மூதாட்டி கூறியதாகவும் போலீஸாரிடம் சத்யா தெரிவித்துள்ளார். அந்த மூதாட்டி யார்? குழந்தையை திருடி விற்கும் புரோக்கராக அவர் செயல்படுகிறாரா? ராமு – சத்யா தம்பதியின் பின்னணியில் உள்ளவர்கள் யார், யார்? என்பதை போலீஸார் விசாரிக்கின்றனர். மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உரிய கண்காணிப்பு இல்லாததே, குழந்தையை எளிதாக திருட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததாக அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
