ஜோதிகாவின் 50வது படம் என்ற விளம்பரத்தோடு திரை வெளிச்சம் அடைகிறது, டைட்டில் கார்டும் இன்னும் நம்பிக்கை தருகிறது. ஆனால், கதையும், திரைக்கதையும் இறுதி வரை தண்டவாளம் போல சேராமலேயே முடிவடையும் வகையில் இரா. சரவணன் படத்தை இயக்கியுள்ளார்.
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறோம்! ஐந்தே மாதங்களில் மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளோம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
“கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்றுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானத்தை விற்றுவிட்டது மோடி அரசு! ஏர் இந்தியா விற்பனை விவகாரத்தில் கிருஷ்ணசாமி கொந்தளிப்பு!
140 கோடி மக்களை நிர்வகிக்கும் அரசால், 130 விமானங்களை நிர்வகிக்க முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விற்கப்பட்டது ஏர் இந்தியா விமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான் என்று விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அமலுக்கு வந்த 10 சதவீத EWS இடஒதுக்கீடு! அழகப்பா பல்கலைக்கழகத்தில் EWS அடிப்படையில் மாணவி சேர்க்கை!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக்னாலஜி துறையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் மாணவி ஒருவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
கடுமையான நிலக்கரி தட்டுப்பாட்டை நோக்கித் தள்ளப்படும் இந்தியா? மின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என மத்திய அரசு அச்சம்!
இந்தியாவின் மின்சார தேவை அதிகரித்துவரும் நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கு இடைக்காலத்தடை! உள்ளாட்சித் தேர்தல் தேவையா, பிரதான கட்சிகள் எதிர்ப்பதன் பின்னணி என்ன?
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரியும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
