Monday, February 16, 2026
Home Blog Page 334

கொரோனா பற்றி வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ! கோவையில் ரெட் அலர்ட் என பரப்பப்படும் தகவலால் பரபரப்பு!

கோவையில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில், 2 வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2 நாட்களாக கோவையில் நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், தமக்கு வேண்டப்பட்ட ஒருவரை எச்சரிப்பதுபோன்ற குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது. அதில், தேர்தலின்போதே லாக் டவுன் போடப்படலாம் என அந்த மருத்துவர் எச்சரிக்கிறார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, “இது தவறான தகவல், குரல் பதிவில் இருப்பது அரசு மருத்துவமனை டாக்டர்தானா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டராக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறும்போது, “சமூக வலைதளங்களில் பரவும் குரல் பதிவில் உண்மையில்லை. அனைத்தும் தவறான தகவல். கோவையில் கொரோனா நோய்த் தொற்று கடந்த 2 வாரங்களாக சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை 40 முதல் 50 ஆக இருந்த நிலையில், தற்போது 50 முதல் 60 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதுமே தொற்று பரவல் சற்று உயர்ந்துள்ளது. இதனால் தான் மீண்டும் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை போன்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவறான தகவல்களை தெரிவித்து மக்களை அச்சப்படுத்த வேண்டாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து. சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலே கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

திமுக காண்பது பகல் கனவா? 75% வாக்குகளில் திமுக, அதிமுக-வுக்கு எவ்வளவு கிடைக்கும்? VELS VIEW!

வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. திமுகவின் வெற்றி எளிதில் சாத்தியப்படாது என்ற நிலையில், திமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்புள்ள கட்சி எது என்பதை பார்க்கலாம்

கேன்சர் செல்களை அழிக்கும் இஞ்சி சாறு! அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி மையம் தகவல்!

இஞ்சி சாறு கேன்சர் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது என அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காங்கிரஸில் ஆரம்பமானது தேர்தல் குஸ்தி! வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்!

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னரே பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரி மாநில திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! முதலியார்பேட்டை தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார் வழக்கறிஞர் சம்பத்!

புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலியார்பேட்டை தொகுதி வேட்பாளராக கலாம் சேவை மைய நிறுவனரும், வழக்கறிஞருமான சம்பத் அறிவிக்கப்பட்டுள்ளார்

துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்கலாமா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் சவால்!

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் துண்டு சீட்டு இல்லாமல் விவாதிக்க தயார்என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார். பல்வேறு சமயங்களில் விவாதத்திற்கு அழைத்தும் ஸ்டாலின் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மகா சிவராத்திரி நாளை வழிபாடு! என்ன சொல்கிறது சைவம்? மகா சிவராத்திரியின் சிறப்பு என்ன?

மகா சிவராத்திரி வழிபாடு நாளை( 11-ந்தேதி) இரவு முதல், 12-ந் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. கோயில்களில் வழக்கம்போல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன.

antalya bayan escort