மனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கணவான்மார்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்! அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தியும், 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மெட்டை திருடி பாட்டமைத்தாக ‘கர்ணன்’ படக்குழு மீது குற்றச்சாட்டு! தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் வாரிசுகள் புகார்!
தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் எழுதி, இசையமைத்த ’கண்டா வர சொல்லுங்க. மணிகண்டனை கண்டா வர சொல்லுங்க’ என்ற பாடலின் சில வரிகள், மெட்டை, அப்படியே, தனுஷின் ’கர்ணன்’ திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் வாரிசுகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு 7 நாள் ஹோம் குவாரன்டைன்! தமிழக அரசு அறிவிப்பு!
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாட்கள் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் ராஜேஷ் தாஸ்! பாலியல் புகார் குறித்து விசாரிக்க 6 பேர் குழு!
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸைக் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு டிஜிபி பதவியும் பழையபடி ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு எனத் தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
மார்ச்-1 முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்த முடிவு!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 60 வயதைக் கடந்தவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.
பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயக்கப்படும்! பணிக்கு வராதோருக்கு ஊதியம் கட் என அரசு அறிவிப்பு!
போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகளை இயக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
