கடந்த பதிவில் சொந்த வீடு யாருக்கு அமையும்? சொந்த வீடு அமைவதற்கான ஜாதக கிரக நிலைகளையும் பார்த்தோம். இந்தப் பதிவில் வாடகை வீட்டிற்கான கிரக நிலைகளை ஆராய்வோம்.
இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை விவகாரம்! ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமி துணிச்சலான முடிவெடுத்ததாக பாராட்டு!
நீண்ட கால இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி சட்டப்பேரவையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது.
சபாநாயகரே கேள்விகளுக்கு பதில் சொன்னால், அமைச்சர்களுக்கு என்ன வேலை? எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் ஆவேசம்!
தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர், 110 விதியின் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என அறிவித்தார்.
திட்டமிட்டபடி 13ந் தேதி போராட்டம்! கோரிக்கை முழக்கமிடும் உரிமையை தடுக்க நினைத்தால்..! களம் கொந்தளிப்பாக உள்ளதென ஐபெட்டோ அறிவிப்பு!
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “டிட்டோஜாக் அமைப்பின் வீரம் செறிந்த போராட்டம் திட்டமிட்டபடி அக்டோபர் 13ஆம் தேதி, பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள SCERT அலுவலகம் முன்பு மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டமாக நடைபெறும்.
டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? Medicine & Treatment for Dengue Fever!
3.00 Minute(s) Read : இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு சற்றே அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் எஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படுகிறது. “டெங்கு” என்ற சொல் ஒரு ஸ்பானிஷ் வார்த்தையாகும், இதன் பொருள் “பாதிப்பு” என்பதாகும். கியூபாவில் 1828இல் இந்த வார்த்தை முதன்முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது.
இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலைகோரி, அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்! முதல்வர் கோபமும், எரிச்சலும் அடைவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா! சாதி ரிதீயான தாக்குதலுக்கு உள்ளாவதாக பகீர் குற்றச்சாட்டு!
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. 33 வயதான இவர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு(தனி) சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டது.
