தென்மேற்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றே மழை தொடங்கியுள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் 30ம் தேதி அரசு டாக்டர்கள் மவுனப் போராட்டம்! பெண் மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குமுறல்!
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படும் வகையில், 2009 ல் கருணாநிதி ஆட்சியில் அரசாணை 354 வெளியிடப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாகவே அந்த ஆணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொத்தாம் பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்களை குறைகூறுவதா? சவுக்கு சங்கரை போல சமஸ் பேசலாமா?
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுவாக பத்திரிகையாளர் சமஸ் பற்றி ஆசிரியர்கள் மத்தியில் மட்டுமின்றி பொதுநோக்கர்கள் மத்தியில் நடுநிலையுடன், சமூக அக்கறையுடன் கூர்மையான கருத்துக்களை அனைவருடைய இதயங்களையும் தொடக்கூடிய வகையில் கருத்துப் பதிவு செய்து வெளியிடுகின்ற மிகச்சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளர் எண்ணம் உண்டு.
#EWS! உயர் சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்துக்கு நாளைய தினம் (நவ.8) கடைசி பணி நாள் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டது.
தமிழிலும் அரசாணை வெளியிட வேண்டும்! துறைவாரியாக அமைச்சர் ஆய்வு செய்வது அவசியம்! ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளும் ஐஏஎஸ் அதிகாரிகளை முழுவதும் மையப்படுத்தி நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து உணர்ந்து வருகிறோம்.
தன்னாட்சி பெற்றுவிட்டதா பள்ளிக் கல்வித்துறை? அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கும் ஆசிரியர் கூட்டணி!
இதுதொடர்பாக ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சசிகலாவை குற்றம் சுமத்தும் ஆறுமுகசாமி ஆணையம்! ஜெ.வைக் காப்பாற்றியிருக்க முடியும்! பரபரப்புத் தகவல்கள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை சந்தேகிப்பதாக ஆணையம் கூறியுள்ளது.