மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் முடிவு செய்தது. பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. இதை எடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது RBI! வீடு,வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி அதிகமாகும்!
ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக உயர்த்த பணவியல் கொள்கைக் குழு முடிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2022 மே மாதம் முதல் இதுவரை 4 முறைகளில் ரெப்போ வட்டி விகிதம் 1.9% உயர்த்தப்பட்டுள்ளது.
ஹவாலா பணம் ரூ.10 கோடி சிக்கியது! நான்கு பேர் கைது! தடை செய்யப்பட்ட PFI அமைப்புக்கு தொடர்பா என விசாரணை?
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அடுத்த கோவிந்தம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்து லாரிக்கு பொருட்களை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு, எழுதும் திறன் இல்லை! கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வழங்கிய அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடவில்லை! ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!
அக்டோபர் 17-ல் காங்கிரஸ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24-ல் தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய நாளை (செப்டம்பர் 30) கடைசி நாள். தேர்தல் முடிந்த இரண்டாவது நாள் (அக்டோபர் 19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.
இளம் தலைமுறையினரை பிஎப்ஐ தவறாக வழிநடத்தியது! தடையை வரவேற்பதாக முஸ்லீம் லீக் அறிவிப்பு!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து பாஜக நிர்வாகிகள், இந்து இயக்கங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
RSS பேரணிக்கு தடை கேட்ட திருமா! உச்ச நீதிமன்றத்தில் முறையிட ஐகோர்ட் உத்தரவு!
தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.