மதுரையில், ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பால் பாக்கெட்டிற்குள் ஈ கிடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உங்கள் செயல் கீழ்த்தரமாக உள்ளது! ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த ஐகோர்ட்!
கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
புதுவை வளர்ச்சிக்கு நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்க முடியாது! லட்சுமி நாராயணனுடன் மோதும் நாராயணசாமி!
மாநிலத்தின் பொருளாதர மீட்பு நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் லட்சுமி நாராயணனின் நேர்த்தியான ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அதை செயல்படுத்தினால், லட்சுமி நாராயணனுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதே நாராயணசாமியின் புறக்கணிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறோம்! ஐந்தே மாதங்களில் மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளோம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
“கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்றுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
UPI கட்டணங்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகள்! நண்பர்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பினால் கட்டணமா? முழு விவரம்!
ப்ரீபெய்டு பேமெண்ட் கருவிகள் மற்றும் வாலட்டுகள் மூலம் செய்யப்படும் UPI (Unified Payments Interface) வணிகப் பரிவர்த்தனைகளின் பரிமாற்றக் கட்டண விவரங்களை தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம்(NPCI) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற பரிந்துரைகளை NPCI ஏற்கெனவே பல முறை வழங்கியுள்ளது.
சொத்து வரி, மின் கட்டணத்தைத் தொடர்ந்து குடிநீர் வரியும் உயர்வு! பொதுமக்கள் அதிருப்தி!
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தோனி வழியே என் வழி! எப்போதும் நான் தலைவன்தான்! மனம் திறக்கும் கோலி!
தோனி வழியையே தான் பின்பற்றுவதாக விராட் கோலி கூறியுள்ளார். கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
