Sunday, July 6, 2025
Home Blog Page 4

பூமி பூஜை செங்கற்களை எட்டி உதைத்த தருமபுரி திமுக எம்.பி.? கோபமடைந்த கட்சியினர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு!

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வசதியாக நவீன நூலகம் கட்ட வேண்டும் என்று தருமபுரி பாமக எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். இதை தமிழக அரசு ஏற்றது.

அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை கைவிட்டார் தினகரன்! முடிவை சொல்லாமல் சசிகலா சஸ்பென்ஸ்!

அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதேநேரம், சசிகலா தனது நிலைப்பாடு பற்றி தெரிவிக்க கால அவகாசம் கேட்டுள்ளார்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க தயராகும் திமுக! ஒற்றை தலைமைக்கு வலியுறுத்தும் நிர்வாகிகள், தொண்டர்கள்!

புதுச்சேரி பிராந்திய திமுகவை ஒரே தலைமையின் கீழ் ஒப்படைக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வேண்டுமென்றால் இந்த மாற்றம் அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.

குடிநீர், மின்சாரம், எரிவாயு, மருந்து கிடைக்காமல் தவிக்கும் பாலஸ்தீனர்கள்! 24 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் வெளியேற இஸ்ரேல் கெடு!

பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிக் குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது.

பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை புலனப் பதிவாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய ஆட்சியாளர்களால் தையல் ஓவியம் உடற்கல்வி கணினி இசை என 16 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த எண்ணிக்கையில் இறந்தவர்கள், ஊதிய பற்றாக்குறையால் பணியை விட்டு விலகியவர்கள் என 4000 பேர் இப்போது பணியில் இல்லை. எஞ்சியுள்ள 12000 பேர் தான் இப்போது பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தான் போராடி வருகிறார்கள்.

AIFETO Annamalai

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என 52,000 பேர் பணியமனம் செய்யப்பட்டார்கள். கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைவருடைய வேண்டுகோளினையும் ஏற்று கொண்டதோடு அவர்களின் ஊதியப் பாதிப்பினையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒரே கையெழுத்தில் அவர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவந்து பணிவரன் முறை செய்து ஆணை வழங்கினார். நெஞ்சிருக்கும் வரை எவராலும் இதை மறக்கத்தான் முடியுமா?

கருணாநிதியின் மகனாக, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் இந்த 12 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களை முழு நேர சிறப்பாசிரியர்களாக ஆணை வழங்கி உதவிடுமாறு பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவும், ஆட்சியின் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

Also Read : எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கருத்தாளர்களை நியமிப்பதில் விதிமீறல்! சட்ட நடவடிக்கைக்கு தயார் என ஐபெட்டோ அறிவிப்பு!

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நாங்கள் போராடுகிற பொழுது, என் பெயருக்கு முன்னால் உள்ள கருணை என்னிடம் நிறைய இருக்கிறது, ஆனால் பின்னால் உள்ள அந்த இரண்டு எழுத்து (நிதி) என்னிடம் இல்லையே என்று நகைச்சுவையாக பேசுவார். ஆனால் அவரது காலத்தில்தான் நான்கு ஊதிய குழுக்களை அமல்படுத்தினார். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்தார்.

தங்கள் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட ஏதாவது சிலவற்றையாவது செய்து கருணாநிதி அரசின் சரித்திரத்தினை தொடர வேண்டுமாய் மீண்டும் மீண்டும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு முதலமைச்சர்… ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்ற வரலாற்று பதிவு ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Also Read : பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியம்!

முன்னதாக, தமிழகத்தில் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆட்சியின்போதே பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தி வந்தனர். அப்போதைய போராட்டங்களில் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நேரடியாக கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Part-time teachers arrested by police and detained at Rajarathinam Stadium in Chennai.

மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் 181 நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்காக திரண்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? நகங்களில் ஏற்படும் மாற்றங்கள்…! நிபுணர்கள் எச்சரிக்கை!

நகங்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட நம் உடல்நிலையை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் ஆகும். நகங்கள், தோலின் ஒரு நீட்சியாகும். அவை நமது விரல்களை பாதுகாப்பதோடு, உடலின் சில நோய்கள் மற்றும் குறைபாடுகளையும் காட்டும் ஒரு குறியீடாக செயல்படுகின்றன.

பேக் செய்யப்பட்ட உணவு, ஆர்கானிக் உணவுகளுக்கு வரி அதிகரிப்பு! உயர்த்தப்பட்ட வரி விகிதங்கள்!

சண்டிகரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்றும், இன்றும் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

antalya bayan escort