ஆரம்பகாலங்களில் பானங்களை வாங்கி குடிப்பதற்கு மக்களிடம் செம்பு, சில்வர், மண்குவளை உள்ளிட்டவை பயன்பாட்டில் இருந்தன. அதன் பின்னர், பிளாஸ்டிக் கப்புகள் பயன்பாட்டிற்கு வந்தன. காலப்போக்கில் இதனைப் பயன்படுத்துவது ஆபத்து என சொல்லப்பட்ட நிலையில், அந்தப்பழக்கம் மாறி தற்போது பேப்பர் கப் பயன்பாட்டில் இருக்கிறது.
கருப்பு பூஞ்சைகள் உள்ள வெங்காயத்தை சாப்பிடலாமா? Black Fungus on Onion and Mucormycosis!
வெங்காயம் இல்லாமல் சமையல் முழுமையடைவது கிடையாது. எனவே வெங்காயம் அத்தியாவசியப் பொருளாக உள்ளது. வெங்காயம் விலை உயர்வு காரணமாகக் கடந்த காலங்களில் ஆட்சியே கவிழ்ந்த வரலாறுகளும் உண்டு.வெங்காயம் இல்லாமல் எந்த சாம்பார் மற்றும் கறியும் சுவையாக இருக்காது. அதே போல வெங்காயம் இல்லாமல் சாலட்டும் முழுமையடையாது. அதே நேரம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வெங்காயம் அள்ளி வழங்குகிறது.
நீரிழிவு நோயாளிகள் சுகர் ஃப்ரீ எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், டீ மற்றும் காஃபியில் செயற்கை இனிப்பான சுக்ரோலோஸ் கலந்து குடித்தால் அவர்களின் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்பினர். இதனையடுத்து 12 வாரங்களுக்கு மேலாக, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 179 பேரைக் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
வெட்ட வெளிச்சமான பாஜக – திமுக உறவு! நாணய வெளியீட்டுக்கு ராகுலை ஏன் அழைக்கவில்லை? என ஈபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி?
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் தேநீர் விருந்தில் அரசாங்கம் கலந்துகொள்ளும். ஆனால் தி.மு.க கலந்து கொள்ளாது, என்று வேடிக்கையான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் தலைவர். அந்தக் கட்சிக்கு துரைமுருகன்தான் பொதுச்செயலாளராக இருக்கிறார்.
இந்திய மருத்துவ மாணவர்களில் 6-ல் ஒருவர் தற்கொலை முயற்சி! தேசிய மருத்துவ ஆணைய சர்வேயில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
3.40 Mins Read : இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களிடையே ஆன்லைன் வாயிலாக, தேசிய மருத்துவ ஆணையம் எடுத்த சர்வேயில், கடந்த 12 மாதங்களில் 16.2 சதவிகித பேர் அதாவது சுமார் ஆறில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். 25 சதவிகித இளங்கலை மாணவர்களும், 15 சதவிகித முதுகலை மாணவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சிபில் ஸ்கோர் குறைஞ்சிடுச்சா? கவலையே வேண்டாம்… இதைப் பின்பற்றினால் ஈஸியா வங்கிகளில் கடன் வாங்கலாம்!
ஒரு நபரின் பணப் பரிவர்த்தனை எவ்வாறு உள்ளது? எவ்வாறு பணத்தைக் கையாளுகிறார் என்பதை வங்கிகளுக்குத் தரும் அமைப்பே சிபில்(CIBIL – Credit Information Bureau (India) Limited). கடன்கள் தருவதற்கு வங்கிகள் முக்கியமாக எதிர்பார்ப்பது நல்ல கிரெடிட் ஸ்கோர்களைத் தான். கிரெடிட் ஸ்கோரை அல்லது சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் நபர்களுக்கு கடன் தரலாமா? வேண்டாமா? என்று வங்கிகள் யோசித்துதான் முடிவு எடுக்கும்.
