தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் ஆணையம் எதிர்த்தும் மோடி பிடிவாதம்! என்ன சொல்லப்போகிறது சுப்ரீம் கோர்ட்! What are electoral bonds?

0
52
Through electoral bonds, corporates will have the opportunity to impose their own purpose in Indian politics and democracy. Image : boomlive.in

3.45 Minute(s) Read : தேர்தல் பத்திரம் (Electoral Bond) என்பது அரசியல் கட்சிகளுக்கு அல்லது தனிநபர்களுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கக்கூடிய ஒரு பத்திரமாகும். விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் நன்கொடையாளர்கள் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நிதி அளிக்கலாம்.

இந்திய அரசு 2017ல் தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிவித்தது. இது, 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். பாரத ஸ்டேட் வங்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 கிளையில் இருந்து மட்டுமே தேர்தல் பத்திரத்தை வாங்க முடியும்.

Press Release Introduction of the Scheme of Electoral Bond

KYC விவரங்களுடன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறாது. இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.

தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. தேர்தல் பத்திரம் பெற்ற கட்சிகள், 15 நாட்களுக்குள் எந்தவித கட்டுபாடுமின்றி, அதை நிதியாக மாற்றிக்கொள்ளலாம். இல்லையெனில் அந்தத் தேர்தல் பத்திரம் பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே தேர்தல் பத்திரத்தைப் பயன்படுத்த முடியும். கடந்த மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும்.

Also Read : சிம்பிளான உயிர் காக்கும் சோதனை! வீட்டிலேயே செய்து பாருங்க, உங்க ஆயுளையே தெரிஞ்சிக்கலாம்! What is the One Leg Standing test?

இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதை தேர்தல் பத்திரங்கள் முறைப்படுத்தும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதால், இது கருப்புப் பணத்தை ஊக்குவிக்கும் என்று தொடர்ச்சியாக புகார் கூறப்பட்டு வருகிறது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல் மனுவை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2018 இல் தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், “அரசியல் கட்சிகளுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அனாமதேய நிதியுதவி வருவதற்கான வழியை தேர்தல் பத்திரம் அனுமதிப்பதால், தேர்தல் ஊழலை இது சட்டப்பூர்வமாக்குகிறது. தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது, அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கான தெரிந்துகொள்ளும் உரிமையை மீறுவதாகும்.

Also Read : மொழிவழிப் பிரிவினை மோசடியின் 67வது நினைவு நாள்! ஈவெரா செய்த வரலாற்றுத் துரோகம்! 85 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பறிபோனதன் பின்னணி!

இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களின் நிறுவனங்களோ, அதைச் சார்ந்த தனிநபரோ, தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும், ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை நிறுவனங்கள் தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்கத் தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது அரசியல் நிதியில் ஒளிவுமறைவின்மையை அதிகரிக்கும். நிறுவனங்களுக்குத் தேவையற்ற சலுகைகளை வழங்க அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும்” என்று மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

Also Read : சமூக ஊடகப் பதிவுகளை தணிக்கை செய்ய அரசு அமைப்பு! ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால், கருத்துரிமைக்குப் பெரும் அச்சுறுத்தல்! Fact Checking Unit!

கடந்த ஆண்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த வழக்கை விசாரிக்க நடப்பாண்டு அக்டோபர் 16ம் தேதி, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால், வழக்கின் முக்கியத்துவம் கருதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. தேர்தல் பத்திரங்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கிறது என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபில் கூறினார். மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, ‘பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக் கூடாது என்றும், நியாயமான கட்டுப்பாடுகள் தேவை’ எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் கடந்த 1ம் தேதி நடந்த விசாரணையில், ’’செப்டம்பர் 30ம் தேதி வரை கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரத்தை, தேர்தல் ஆணையம் சமர்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். தேர்தல் பத்திரம் குறித்த இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் கட்சிகளிடம் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : அரசு ஆதரவில் சைபர் தாக்குதல்! எதிர்க்கட்சி எம்.பி-க்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலெர்ட்! ஒட்டுக்கேட்கிறதா மத்திய அரசு?

2016-17 மற்றும் 2021-22க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில், மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும், 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. இந்த ரூ.9,188 கோடியில், பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது. அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது.

Association for Democratic Reforms (ADR) அமைப்பின் அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டுக்கும், 2021-22 நிதியாண்டுக்கும் இடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 743 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகள் 48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன.

இந்த ஐந்தாண்டுகளில், 2019-20ஆம் ஆண்டில் (இது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு), தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.3,439 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக ADR தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் (11 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன) அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளன.

Also Read : உங்கள் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் டிஜிட்டல் புத்தகம்! Know what’s better for your heath? – a digital book or a print book?

2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும், அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

தேர்தல் பத்திரங்களை ‘நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை’ என்று குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்தப் பத்திரங்கள் நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும், அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும், பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தில், நிதி வழங்குபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைத்திருப்பது, கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை; அரசியல் கட்சிகளுக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry