பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் சமுதாயத்திற்கு இந்த நிலைமையா? நெஞ்சம் பதறுகிறது! அமைச்சர் மவுனம் சாதிப்பது ஏன்? என தமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரத்தில், அரசு உதவிபெறும் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியரை மாணவன் ஒருவனின் பெற்றோர் ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கிய சம்பவத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள்! இரண்டு அதிகாரிகளின் பிடியில் கல்வித்துறை! கையறு நிலையில் அமைச்சர்! Exclusive
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மேட்டிமைத்தனமான ஆலோசனைகளின் வெளிப்பாடான வெற்று விளம்பரங்களால் பள்ளிக் கல்வித்துறை தரத்தை இழந்து வருகிறதோ என்கிற சந்தேகம் கல்வியாளர்கள் மட்டுமல்ல, சாமானியர்களுக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டது.
50,000 மாணவர்கள் தேர்வெழுத வராதது திட்டமிட்ட சதி! நவீனத் தீண்டாமையைப் புகுத்தும் பாடத்திட்டங்கள், தேர்வுமுறைகள்! சிறப்புக் கட்டுரை!
4.25 mts Read : பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை! இந்த அதிர்ச்சிகர தகவலின் பின் இருக்கும் உண்மைகளை பார்க்கவோ, உணரவோ அதிகார மையத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை! இதற்கு பல சமூக, பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும், இது ஒரு திட்டமிட்ட சதியாகவே தோன்றுகிறது.
கல்வித்துறையை விளம்பரத் துறையாக மாற்றுவதா? அதிகாரிகள் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!
சமீபத்தில் வெளியான கல்வி தரப்பட்டியலில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 14வது இடத்தில் இருக்கிறது. 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான தேர்வு பொதுத் தேர்வு போல் நடத்தப்பட வேண்டுமா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை என்று ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா.அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.
