சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்கள்! பல ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கின!
தமிழகத்தில் காற்றதாழ்வு, காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நேற்று இரவு மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ள.
குதிரையேற்ற போட்டியில் அசத்தும் இளம் வீராங்கனைகள்! மீண்டும் தங்கம் வென்று அசத்தல்!
FEI World Equestrian Dressage Challenge 2022 குதிரையேற்றப் போட்டியில் சென்னையின் இளம் வீராங்கனைகள் புதிய உச்சத்தை தொட்டதுடன், மீண்டும் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள ஏஎஸ்சி மையத்தில் கடந்த வாரம் இந்தப் போட்டி நடைபெற்றது.
#EWS சட்டத்தை உருவாக்க துணைபுரிந்த திமுக இப்போது இரட்டை வேடம் போடுகிறது! அதிமுக கண்டனம்!
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”எம்.ஜி.ஆர், தனது திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல, அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது கனவில் மிதந்து வருகிறார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நீடிக்கும் மழை! சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர்! மக்கள் அவதி!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே இது நாளை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை 115 நிறுத்திவைப்பு! 69 விழுக்காடு இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டுள்ளதாக ஆசிரியர் கூட்டணி கருத்து!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகள் அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான விதிகளை மாற்ற மனிதவள சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
