பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க மார்ச் 17 வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
3 மாநில தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு! நாகாலாந்து, திரிபுராவில் பாஜக கூட்டணி ஆட்சி!
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மூன்று வடகிழக்கு மாநிலங்களில், நாகாலாந்து, திரிபுராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைகிறது. மேகாலயாவில் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிக தொகுதிகளில் முன்னேறுகிறது.
அதானிக்கு சாதகமாக புதிய சட்டத் திருத்தங்கள்! RTI மூலம் அம்பலம்! பெரும் சர்ச்சையில் சிக்கிய மோடி அரசு!
நிலக்கரி சுரங்கத் தொழிலில் அதானி குழுமத்துக்கு ஆதரவாகவும், சாதகமாகவும், அவர்களது தொழிலை லாபகரமானதாக்கும் வகையிலும் மத்திய பாஜக அரசு சட்டங்களை கொண்டுவந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் (TRC) என்ற என்.ஜி.ஓ. அமைப்பும், அல் ஜசீரா ஊடக நிறுவனமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மூலம் இதை அம்பலப்படுத்தி உள்ளது.
மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது #Airtel! வருவாய் போதவில்லை என குறைபட்டுக்கொள்ளும் சுனில் மிட்டல்!
டெலிகாம் கட்டணத்தை விரைவில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் அவர் இதனை அறிவித்தார்.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு! LPG விலை உயர்வால் ஆட்டோ கட்டணமும் உயர்கிறது!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்திய முதலமைச்சர்! தண்டனைக்குரிய குற்றம் என பார்வைச் சவால் உடையோர் ஆவேசம்!
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் பிப்ரவரி 25ம் தேதியுடன் நிறைவடைந்தது. அன்றைய தினம், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் குறித்து விமர்சித்தபோது, “கண் தெரியா கபோதின்னுவாங்க அதான்…” என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.
