நீட் தேர்வு மத்திய அரசின் முடிவல்ல என்றும், அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எனவும் கூறியுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‛நீட் தேர்வு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது’ எனவும் கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! கஞ்சா விற்பனை அமோகம்! அமித் ஷா கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஈபிஎஸ்!
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு
20 நிமிடங்கள் நீடித்தது.
விவசாயிகள் போராட்டம், அக்னிபத் போராட்டங்களில் ஊடுருவிய மாவோயிஸ்டுகள்! உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்!
இடதுசாரி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் 18-வது ஆண்டு விழாவையொட்டி அதன் மத்திய குழு சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு 21 பக்க அறிக்கை சமீபத்தில் அனுப்பப்பட்டது.
பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை! பிள்ளைகளை அனுப்ப மறுத்து போராட்டம் செய்த பெற்றோர்!
கரூர் அருகே ஆரம்ப பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்.
