தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கடந்த 6-ந் தேதி வேப்பேரி, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. ஆ.ராசா மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
நீதித்துறையை அவதூறாக பேசியதாக வழக்கு! சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!
கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில், ரெட்பிக்ஸ் சேனலில் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்திருந்தார். அவரது பிளாக்கிலும் எழுதியிருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டிருந்தது.
விசாரணைக்குப் பின் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் மரணம்! போலீஸ் தாக்கியதே காரணம் என பரபரப்பு புகார்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணை முடிந்து காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில்தான் அவர் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்! சாப்பாட்டிலேயே கைகழுவிய முதலமைச்சர்!
காலைச் சிற்றுண்டித் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேகமாகப் பரவும் இன்புளூயன்சா காய்ச்சல்! எச்சரிக்கையாக இருக்குமாறு அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்!
தமிழகத்தில் தற்போது இன்ஃபுளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.
சொத்து வரி, மின் கட்டணத்தைத் தொடர்ந்து குடிநீர் வரியும் உயர்வு! பொதுமக்கள் அதிருப்தி!
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதற்கு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
