ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவர்களது விடுதலையை தடுத்ததே திமுக–தானே, தேர்தலுக்காக ஸ்டாலின் கபட நாடகம் ஆடுவது தெரியாதா? என தமிழ் உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
நமசிவாயம், தேனி ஜெயக்குமார் திடீர் சமாதானம்! ‘கை’கோர்த்து வைத்த மையப்புள்ளி எது? தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் நமசிவாயம்!
வரும் சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதியில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை, என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த தேனி ஜெயக்குமார் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தம்மை எதிர்க்க வலுவான போட்டியாளர் இல்லாததால், வெற்றி சுலபமாக ‘கைகூடி’விட்டதை எண்ணி அமைச்சர் நமசிவாயம் உற்சாகத்தில் உள்ளார்.
கோவிட்-19லிருந்து மீண்ட ‘Gopi’-யின் அனுபவம்! அசத்தலான சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனை! தைரியமே முதல் மருந்து!
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட அனுபவத்தை பகிர்வதே இந்த பதிவு. இதன் மூலம், வாசகர்களாகிய உங்களுக்கு கோவிட்-19 மீதான அச்சம் நீங்குவதுடன், அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை அதிகமாகும்.
தமிழகத்துடன், புதுச்சேரியை இணைக்க விரும்புகிறாரா நாராயணசாமி? மக்கள் மத்தியில் பீதி!
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்க முயற்சிக்கிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து கூறிவருகிறார். ஒரு மாநில முதலமைச்சரே இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவதை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது.
ஆங்கிலேயர்கள் எழுதிய நூலை மேற்கோள்காட்டுகிறார் திருமாவளவன்! மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்!
திருமாவளவன் சொல்வது எதுவும் மனு ஸ்மிருதியில் இல்லை, இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காமல் நியாயப்படுத்துவது மக்களிடம் கோபத்தை அதிகரிக்கச்செய்துள்ளது என்று பா.ஜ.க., துணைத்தலைவர் அண்ணாமாலை கூறியுள்ளார்.
திமுக-வில் ஓங்கும் கனிமொழியின் செல்வாக்கு! ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! கலக்கத்தில் மூவர் அணி!
திமுக–வில், மகளிரணி செயலாளர் கனிமொழியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூத்த நிர்வாகிகள் ஆதரவு தர, மகளிரணியைத் தாண்டி தமக்கான ஆதரவு வட்டம் உருவாவதால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.
புதுச்சேரியில் மொட்டு விடும் தாமரை! பாஜக-வில் இணைய ஆர்வம் காட்டும் மாற்றுக் கட்சியினர்!
புதுச்சேரியில் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமே இருந்த பாஜக, தற்போது, தொண்டர்கள் மட்டத்திலும் செல்ல ஆரம்பித்துள்ளது. மாற்றுக்கட்சியினர் பலரும் பாஜக–வில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
