காரைக்காலில் பத்தரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நேரு மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய கட்டுமானத்துக்கு காரணமாக இருந்த காரைக்கால் பிராந்திய திமுக அமைப்பாளர் நாஜிம் பெயரை, ஆளும் கட்சி இருட்டடிப்பு செய்வதாக திமுக–வினர் குமுறுகின்றனர்.
ரேஷன் கடையில் அரிசி போடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! காரைக்கால் கல்வி அதிகாரியின் ‘அல்லி’ ராஜ்ஜியம்!
புதுச்சேரியில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை ரேஷன் கடையில் அரிசி போடும் பணியை செய்ய வைத்த மாநில அரசு, தற்போது, வார் ரூம் டூட்டி என்ற பெயரில், கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணியை வழங்கியுள்ளது. அப்படியென்றால் மாணவர்களின் கல்வி…?
‘டீ கடை’யில் இன்டர்வியூ! பூத் ஏஜென்ட் முதல் வேட்பாளர் வரை தேர்வு! திமுக-வினரின் உரிமைகளை பறிக்கிறதா I-PAC?
திமுக–வுக்காக தேர்தல் வியூகம் வகுத்து வரும் ஐ–பேக் நிறுவனம், தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய டீ கடையில்தான் இன்டர்வியூ நடத்துகிறது. அதேபோல், திமுக–வின் பூத் ஏஜென்ட் முதல் வேட்பாளர் தேர்வு வரை அனைத்தையும் செய்வது, செய்யப்போவது ஐ–பேக் நிறுவனம்தான்.
புதுச்சேரியில் ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கே பாதுகாப்பு இல்லையா? தொடர்ந்து வீழ்த்தப்படும் காங்கிரஸ் கட்சியினர்!
எல்லா மாநிலங்களிலும் முன்விரோதம், அரசியல் கொலைகள் நடைபெறுவது தொடர்கதைதான். அந்த மாநிலங்களில் ஆளும் கட்யினர் பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், கொலைகள் இயல்பானதாக மாறிவரும் புதுச்சேரியில், ஆளும் கட்சியினரே கொலையாவதுதான் அதிர்ச்சியான உண்மை.
காவிப்பூ சூடிய குஷ்பு! நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதாக மோடிக்கு புகழாராம்! அன்றே கணித்த வேல்ஸ் மீடியா!
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாஜகவில் இணைந்தார். தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.
பாலனுக்கு மட்டும் ரங்கசாமி முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? வெளி உலகுக்கு தெரியாத பரபரப்பு தகவல்கள்!
மறைந்தாலும், மறக்க முடியா மாமனிதனர் என்றுதான் பாலனை ரங்கசாமி போற்றிவந்தார். ரங்கசாமி, அவருக்கு அளித்த முக்கியத்துவம், சொந்த கட்சியினரைத் தாண்டி, புதுச்சேரியில் அனைவரும் அறிந்ததுதான். ஆனால், மறைந்த பாலனுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
சுகாதாரமான குடி தண்ணீருக்காக ஏங்கும் ஏம்பலம் தொகுதி மக்கள்! அமைச்சர் கந்தசாமியின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் அவலம்!
புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட கரிக்கலாம்பாக்கம் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் உடல் நலன் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
