Thursday, March 19, 2026
Home Blog Page 335

எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ளுங்கள்! ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

திமுகவுக்கு இது இறுதித் தேர்தலாக அமைய வேண்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனாவுக்காக தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க முடியாது! சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கொரோனா 2-வது அலை! கட்சிகள் என்ன செய்ய வேண்டும்? தடுப்பூசியில் சிறந்தது கோவாக்சினா? கோவிஷீல்டா?

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அது மேலும் பரவாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை! சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை! மாஸ்க் அணிய அறிவுரை!

தமிழகத்தில் கோவிட்-19 பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 2-வது அலை உருவாகியுள்ளது

அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கை கைவிட்டார் தினகரன்! முடிவை சொல்லாமல் சசிகலா சஸ்பென்ஸ்!

அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதேநேரம், சசிகலா தனது நிலைப்பாடு பற்றி தெரிவிக்க கால அவகாசம் கேட்டுள்ளார்.

வேல்ஸ் மீடியா கணித்தபடி மண்ணாடிப்பட்டில் போட்டியிடுகிறார் நமச்சிவாயம்! வில்லியனூரில் ஆதரவாளர்கள் முன் கண்ணீர்!

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்,  வில்லியனூர் தொகுதியிலிருந்து மாறி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

கொரோனா பற்றி வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோ! கோவையில் ரெட் அலர்ட் என பரப்பப்படும் தகவலால் பரபரப்பு!

கோவையில் கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில், 2 வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக 2 நாட்களாக கோவையில் நோய்த் தொற்று தீவிரமாகியுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், தமக்கு வேண்டப்பட்ட ஒருவரை எச்சரிப்பதுபோன்ற குரல் பதிவு வேகமாக பரவி வருகிறது. அதில், தேர்தலின்போதே லாக் டவுன் போடப்படலாம் என அந்த மருத்துவர் எச்சரிக்கிறார்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது, “இது தவறான தகவல், குரல் பதிவில் இருப்பது அரசு மருத்துவமனை டாக்டர்தானா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டராக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுகாதாரத் துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறும்போது, “சமூக வலைதளங்களில் பரவும் குரல் பதிவில் உண்மையில்லை. அனைத்தும் தவறான தகவல். கோவையில் கொரோனா நோய்த் தொற்று கடந்த 2 வாரங்களாக சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் தினசரி சராசரி பாதிப்பு எண்ணிக்கை 40 முதல் 50 ஆக இருந்த நிலையில், தற்போது 50 முதல் 60 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதுமே தொற்று பரவல் சற்று உயர்ந்துள்ளது. இதனால் தான் மீண்டும் சோதனைச் சாவடிகளில் பரிசோதனை போன்ற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவறான தகவல்களை தெரிவித்து மக்களை அச்சப்படுத்த வேண்டாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து. சமூக இடைவெளியை கடைப்பிடித்தாலே கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

antalya bayan escort