உளவுத்துறை ஏடிஜிபியாக கோலோச்சிக் கொண்டிருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், திடீரென தலைமையிட ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் பதவியைப் பெற பல்வேறு வகையில் அவர் காய்நகர்த்தி வந்தார். உளவுத்துறை மொத்தமாக தோல்வியடைந்துவிட்டது என பல சம்பவங்களை மேற்கோள்காட்டி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல தருணங்களிலும் குற்றம்சாட்டிவந்தன.
வெகுவாகக் குறைந்த கேஆர்எஸ் அணை நீர்மட்டம்! தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது சந்தேகம்!
கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது.
அர்ச்சகர் நியமனத்தில் சாதிக் குறுக்கீடு கூடாது! ஆகமம், பூஜைகளில் தேர்ச்சிப் பெற்றவர்களை நியமிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பு!
சேலம் சுகவனேஷ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் பணியிடங்களை நிரப்ப கோயில் நிர்வாகம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வெளியிடப்படவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அரசு ஊழியர்களை பழிவாங்கும் திமுக அரசு! வட்டார வள அலுவலர்களை மீண்டும் பணியமர்த்த சீமான் வலியுறுத்தல்!
“வள அலுவலர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது 9 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துவிட்டுப் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும் திமுக அரசின் முடிவு முழுக்க முழுக்க அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கையே” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!
இந்தியாவின் 80 சதவீதம் பகுதிகள் தென்மேற்கு பருவமழையைத்தான் நம்பி இருக்கிறது. இந்த ஆண்டு, எல்-நினோ நிகழ்வால் இந்தியாவில் இயல்பை விட குறைவான பருவமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.
